2020-21ஆம் நிதியாண்டில் இந்தியாவில் எப்போதும் காணாத அளவிற்கு அதிகப்படியான அன்னிய முதலீடுகள் குவிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்று, நாடு முழுவதும் லாக்டவுன், வேலைவாய்ப்பின்மை, மக்கள் மத்தியில் வருமானம் குறைவு எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த நிலையில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர்.
அன்னிய முதலீட்டு அளவு
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் சுமார் 81.72 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளனர். இது 2019-20ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம்.
இதேபோல் 2019-20ஆம் நிதியாண்டில் இந்தியப் பங்குச்சந்தையில் அன்னிய முதலீடு வாயிலாக 49.98 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட நிலையில், 2020-21ஆம் நிதியாண்டில் இதன் அளவு 19 சதவீதம் அதிகரித்து 59.64 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அன்னிய முதலீட்டுக் கொள்கை
மத்திய அரசு அடுத்தடுத்துச் செய்து வந்த அன்னிய முதலீட்டுக் கொள்கை மாற்றத்தின் வாயிலாக, இந்தியாவில் வர்த்தகம் செய்யவும், வர்த்தகம் விரிவாக்கம் செய்யவும் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் குவிந்துள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் FDI equity inflow மட்டும் 59.64 பில்லியன் டாலராக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
மேலும் 2020ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் மட்டுமே 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகள் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் முதலீடுகள் இல்லையெனில் கடந்த வருட அளவீட்டைத் தான் இந்தியா அடைந்திருக்கும்.
டாப் 3 நாடுகள்
இந்நிலையில் இந்தியாவில் 2020-21ஆம் நிதியாண்டில் அதிகமாக முதலீடு செய்துள்ள நாடுகள் பட்டியலில் முதல் 3 இடத்தைச் சிங்கப்பூர் (29%), இதைத் தொடர்ந்து அமெரிக்கா (23%), மொரீஷியஸ் (9%) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளது. இந்த 3 நாடுகள் மட்டுமே சுமார் மொத்த முதலீட்டில் 61 சதவீத தொகையை முதலீடு செய்துள்ளது.
முக்கியத் துறைகள்
மேலும் 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியாவில் குவிந்த மொத்த அன்னிய முதலீட்டில் கம்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்வேர் துரையில் 44 சதவீத முதலீடும், கட்டுமான துறையில் 13 சதவீதமும், சேவைத் துறையில் 8 சதவீதம் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
முக்கிய மாநிலங்கள்
இதேபோல் மொத்த அன்னிய முதலீட்டில் குஜராத் 37 சதவீத முதலீட்டையும், மகாராஷ்டிரா 27 சதவீதத்தையும், கர்நாடகா மாநிலம் 13 சதவீத முதலீட்டையும் பெற்று உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications