இந்தியாவில் நவம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 33 சூப்பர் கம்ப்யூட்டர்கள் செயல்பாட்டில் இருக்கின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வழக்கமான கம்ப்யூட்டர்களை விட சூப்பர் கம்ப்யூட்டர்கள் 1,000 மடங்கு வேகமாக இயங்கும்.
சாதாரண கம்ப்யூட்டர்கள் ஆண்டு கணக்கில் செய்யும் பணிகளை, சூப்பர் கம்ப்யூட்டர்கள் சில நிமிடங்களில் செய்து முடிக்கும். எனவே முக்கியமான ஆய்வு பணிகளுக்கு எல்லாம் இவை மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். இந்தியாவில் இதற்காகவே அரசு தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 33 சூப்பர் கம்ப்யூட்டர்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மொத்தமாக 32 Petaflop திறன் கொண்ட 33 சூப்பர் கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கணினியின் வேகத்தை கணக்கீடு செய்யக்கூடிய அலகு தான் Petaflop.
மத்திய மின்னணு மற்றும் ஐடி துறை அமைச்சரான ஜிதின் பிரசாத் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்நாட்டிலேயே சூப்பர் கம்ப்யூட்டர்களை வடிவமைப்பது, மேம்படுத்துவது மற்றும் உற்பத்தி செய்வது தொடர்பான தொழில்நுட்பங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
எனவே சூப்பர் கம்ப்யூட்டிங்கிற்கு தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவைகாக நாம் வெளிநாட்டை சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை என்றார்.
கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 3 சூப்பர் கம்ப்யூட்டர்களை நாட்டிற்காக அர்ப்பணம் அர்ப்பணித்தார். PARAM Rudra என பெயரிடப்பட்ட இந்த மூன்று சூப்பர் கம்ப்யூட்டர்களும் ஆயிரம் இளம் ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் வல்லுனர்கள், பொறியாளர்களுக்கு இயற்பியல் , புவி அறிவியல் மற்றும் காஸ்மாலஜி உள்ளிட்ட துறைகளில் ஆய்வு செய்வதற்கு தேவையான வசதிகளை வழங்கும் என சொல்லப்பட்டது.
இந்த மூன்று சூப்பர் கம்ப்யூட்டர்களும் புனே, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள அரசின் ஆய்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. எனவே நாட்டில் இதுவரை மொத்தமாக 33 சூப்பர் கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இவை அனைத்தும் ஐஐடி உள்ளிட்ட பிரதான கல்வி நிறுவனங்களிலும் பிரதான ஆய்வு நிறுவனங்களிலும் தற்போது பயன்பாட்டில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலக அளவில் அமெரிக்காவில் தான் அதிகபட்சமாக சூப்பர் கம்ப்யூட்டர்கள் நிறுவப்பட்டு பயன்பாட்டில் இருக்கின்றன. மொத்தமாக அமெரிக்காவில் இருக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களின் வேகம் என்பது 6475 Petaflop ஆக இருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதன்முறையாக மத்திய அரசு தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் திட்டத்தை அமல்படுத்தியது இதற்காக 4500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications