மத்திய அரசு சமீபத்தில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த நிலையில் அந்த தடை நீக்கப்படுமா? என்பது குறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
கோதுமை விலையை உள்நாட்டில் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த 14ஆம் தேதி தடை விதித்தது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கோதுமை விலை உயர்ந்தது.
கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியாவை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் என சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டினா ஜியார்ஜிவா வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஏற்றுமதிக்கு தடை
கோதுமை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா, கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடை குறித்து மறுபரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தடை நீக்கம் இல்லை
இந்த நிலையில் இன்று சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள், 'தற்போதைய சூழலில் கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்க முடியாது என்றும் அவ்வாறு தடையை நீக்கினால் அது கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கே பயனளிக்கும் என்றும் கூறினார்.
ஏழை நாடுகளுக்கு கோதுமை
ஆனால் அதே நேரத்தில் ஏழை நாடுகளுக்கு குறைந்த விலையில் கோதுமையை இந்தியா தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிர்ணயித்த இலக்கு
2022 - 23 ஆம் ஆண்டில் கோதுமை ஏற்றுமதியை ஒரு கோடி டன்னாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து நிலையில் திடீரென ஏற்றுமதிக்கான தடை உத்தரவை பிறப்பித்துள்ளது, கோதுமை விவசாயிகளுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ப.சிதம்பரம் கருத்து
கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிப்பது கோதுமை விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் தற்போதுதான் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் மோசமானது என்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications