சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநராக இருக்கும் இந்தியாவை சேர்ந்த கீதா கோபிநாத் ஞாயிற்றுக்கிழமை, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு சுமார் 15 சதவீதமாக உள்ளது என கணக்கிட்டு கூறியுள்ளார்.
அமெரிக்கா, சீனாவின் ஜிடிபி வளர்ச்சி இமயம் போல் உயர்ந்திருக்கும் வேளையில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி எப்படி சீனாவுக்கு ஈடுக்கொடுக்க முடியும் என்ற கேள்வி நீண்ட காலமாக உயர்ந்திருக்கும் வேளையில் கீதா கோபிநாத்-ன் பேச்சு பலருக்கும் வியப்பை அளித்துள்ளது.

ஐஎம்எப் துணை தலைவர் கீதா கோபிநாத் முன்னணி பத்திரிக்கைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தற்போதைய கணிப்புகளின் அடிப்படையில், 2027-28க்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் கூறினார். இதோடு உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு சுமார் 15 சதவீதமாக உள்ளது என கணக்கிட்டு கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவை உலகளாவிய வளர்ச்சியின் இயந்திரம் இன்ஜின் என குறிப்பிட்டு உள்ளார் கீதா கோபிநாத், ஆனால் இந்திய பொருளாதாரம் உயரிய இடத்தை அடைவதற்கு இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது என்றும் தெளிவாக கூறினார் கீதா கோபிநாத்.
இந்தியா தனது உச்சக்கட்ட பொருளாதார நிலையை அடைய அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் மட்டும் அல்லாமல் பல ஆண்டுகளுக்கு தற்போது உள்ள உயரிய வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொள்வது அவசியம் என்று தெரிவித்தார். இதற்கு கட்டமைப்பு சீர்திருத்தங்கள் கட்டாயம் தேவைப்படும் என்றும் கீதா கோபிநாத் கூறியுள்ளார்.
இந்தியா ஒரு பெரிய நாடு என்பதால் தனிநபர் வருமானம் அடிப்படையில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருந்தாலும் கூட சிறிய அளவிலேயே இருக்கும். இதனால் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை இன்னும் அதிகமாக உயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என பொருளாதார நிபுணரும், ஐஎம்எப் துணை தலைவர் கீதா கோபிநாத் கூறினார்.
இதோடு இந்தியாவின் நடப்பு நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் ஆறு சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்றும் கீதா கோபிநாத் கூறினார். பொருளாதார நிபுணரின் கூற்றுப்படி, வளர்ச்சியைத் தூண்டும் இரண்டு காரணிகள் பொது முதலீடு மற்றும் நெகிழ்ச்சியான நுகர்வு செலவு.
ஆனால் இந்த அடிப்படையான இரு விஷயங்களை சரி செய்வதில் பல சவால்கள் உள்ளது. மேலும் கீதா கோபிநாத் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய 4 மாநிலங்கள் மட்டுமே அதிக அளவில் அன்னிய நேரடி முதலீட்டைப் பெறுகின்றன, பிற மாநிலங்கள் அதிகப்படியான முயற்சிகளை செய்ய வேண்டியது கட்டாயம்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications