இந்தியாவில் சமீபத்திய காலமாகவே ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்றது. இதன் மூலம் வேலை வாய்ப்பும் பெருகி வருகின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மையே.
இந்த நிலையில் தான் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர், உணவு மற்றும் பொது விநியோகம் , ஜவுளித்துறை அமைச்சகத்தின் தலைவரான பியூஷ் கோயல், இந்தியா ஸ்டார்ட் அப்களின் வீடாக உள்ளது.
தற்போது இந்தியாவில் 75000 ஸ்டார்ட் அப்கள் உள்ளன. இதன் முலம் 7.46 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
75 ஆவது ஆண்டில் 75,000 ஸ்டார்ட் அப்
சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டில் இந்தியா இப்போது 75,000 ஸ்டார்ட் அப்களின் தாயகமாக உள்ளது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே.
ஆரம்பத்தில் 808 நாட்களில் அங்கீகரிக்கப்பட்ட 10,000 ஸ்டார்ட் அப்களுடன் ஒப்பிடும்போது, சமீபத்திய 156 நாட்களில் 10,000 ஸ்டார்ட் அப்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த துறையை சேர்ந்தவை?
இவ்வாறு வரும் ஸ்டார்ட் அப்களில் 49% டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்களில் 12% ஐடி சேவையினை வழங்கும் நிறுவனங்களாகவும், 9% ஹெல்தேர் & லைஃப் சயின்ஸ் துறையை சேர்ந்ததாகவும், 5% வணிக சேவையையும், 5% விவசாயத்தினையும் சார்ந்துள்ளன.
வேலை வாய்ப்பும் அதிகரிப்பு
கடந்த ஆண்டுகளில் பார்க்கும்போது வேலைவாய்ப்பானது 110% கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. 2015ம் ஆண்டு செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையின் போது நாட்டில் புதுமை மற்றும் ஸ்டார்ட் அப்களை வலுப்படுத்த தேவையான சுற்றுசூழல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
வெற்றிகரமான சூழல்
6 ஆண்டுகளுக்கு பிறகு அப்படியொரு வெற்றிகரமான சூழல் உருவாகியுள்ளது. இன்று அதன் பலனாக இந்தியா ஸ்டார்ட் அப்களின் வீடாக திகழ்கிறது. பற்பல ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வேலை வாய்ப்பும் அதிகரித்து வருகின்றது. மொத்தத்தில் இனி வரும் காலங்களிலும் இந்தியாவில் ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications