இந்தியாவில் சமீபத்திய காலமாகவே ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்றது. இதன் மூலம் வேலை வாய்ப்பும் பெருகி வருகின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மையே.
இந்த நிலையில் தான் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர், உணவு மற்றும் பொது விநியோகம் , ஜவுளித்துறை அமைச்சகத்தின் தலைவரான பியூஷ் கோயல், இந்தியா ஸ்டார்ட் அப்களின் வீடாக உள்ளது.
தற்போது இந்தியாவில் 75000 ஸ்டார்ட் அப்கள் உள்ளன. இதன் முலம் 7.46 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
75 ஆவது ஆண்டில் 75,000 ஸ்டார்ட் அப்
சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டில் இந்தியா இப்போது 75,000 ஸ்டார்ட் அப்களின் தாயகமாக உள்ளது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே.
ஆரம்பத்தில் 808 நாட்களில் அங்கீகரிக்கப்பட்ட 10,000 ஸ்டார்ட் அப்களுடன் ஒப்பிடும்போது, சமீபத்திய 156 நாட்களில் 10,000 ஸ்டார்ட் அப்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த துறையை சேர்ந்தவை?
இவ்வாறு வரும் ஸ்டார்ட் அப்களில் 49% டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்களில் 12% ஐடி சேவையினை வழங்கும் நிறுவனங்களாகவும், 9% ஹெல்தேர் & லைஃப் சயின்ஸ் துறையை சேர்ந்ததாகவும், 5% வணிக சேவையையும், 5% விவசாயத்தினையும் சார்ந்துள்ளன.
வேலை வாய்ப்பும் அதிகரிப்பு
கடந்த ஆண்டுகளில் பார்க்கும்போது வேலைவாய்ப்பானது 110% கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. 2015ம் ஆண்டு செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையின் போது நாட்டில் புதுமை மற்றும் ஸ்டார்ட் அப்களை வலுப்படுத்த தேவையான சுற்றுசூழல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
வெற்றிகரமான சூழல்
6 ஆண்டுகளுக்கு பிறகு அப்படியொரு வெற்றிகரமான சூழல் உருவாகியுள்ளது. இன்று அதன் பலனாக இந்தியா ஸ்டார்ட் அப்களின் வீடாக திகழ்கிறது. பற்பல ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வேலை வாய்ப்பும் அதிகரித்து வருகின்றது. மொத்தத்தில் இனி வரும் காலங்களிலும் இந்தியாவில் ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications