இந்த வருடம் சம்பள உயர்வு கட்.. உயர் மட்ட ஊழியர்கள் அதிர்ச்சி..!

இந்திய நிறுவனங்கள் கொரோனா பாதிப்பால் பெரிய அளவிலான வர்த்தக சவால்களையும், வருமான சரிவையும் எதிர்கொண்ட நிலையில் இந்த வருடம் நிறுவனத் தலைவர்களுக்கு எவ்விதமான சம்பள உயர்வும் கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஊழியர்களுக்குச் சம்பள குறைப்பு, வருடாந்திர சம்பள உயர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது நிறுவனத் தலைவர்களுக்குச் சம்பள உயர்வு ரத்து செய்யப்பட உள்ளது.

லாக்டவுன் பாதிப்பு

லாக்டவுன் பாதிப்பு

கொரோனா தொற்றுக் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் இந்திய நிறுவனங்கள் 100 சதவீதம் முழுமையாக இயங்க முடியாத நிலையில் வர்த்தகம் மற்றும் வருமானத்தில் பெரிய அளவிலான சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் நிர்வாகம் நிறுவனத் தலைவர்கள் அதாவது சிஇஓ-க்களுக்குச் சம்பள உயர்வைக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

சீஇஓ-வின் சம்பளம்

சீஇஓ-வின் சம்பளம்

பொதுவாக ஒரு சீஇஓ-வின் சம்பளம் 3 முக்கியப் பகுதிகளாகக் கொடுக்கப்படும் - நிலையான சம்பளம், குறுகிய காலம் மற்றும் நீண்ட காலச் செயல்திறன் அடிப்படையில் ESOP, 3வது மிகவும் முக்கியமான நிறுவனத்தின் நிதிநிலை செயல்திறன் பொருத்து சம்பள உயர்வு வழங்கப்படும்.

நிறுவனத்தின் நிதிநிலை

நிறுவனத்தின் நிதிநிலை

இந்த மூன்று பிரிவுகளில் பெரும் பகுதி நிறுவனத்தின் நிதிநிலை வைத்தே ஒரு வருடத்தில் சிஇஓ-வின் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இந்த வகையில் 2020ல் இந்திய நிறுவனங்கள் செப்டம்பர் காலாண்டில் அதிகளவிலான லாபத்தை அடைந்திருந்தாலும், முதல் 2 காலாண்டில் மிகவும் மோசமான நிதிநிலையை
எதிர்கொண்டது அனைவருக்கும் தெரியும்.

சம்பள உயர்வு கிடையாது

சம்பள உயர்வு கிடையாது

இதன் வாயிலாக இந்த ஆண்டு நிறுவனத்தின் நிதிநிலையைப் பொருத்து சிஇஓ-க்களின் சம்பள உயர்வைக் கணக்கிடும் போது சம்பள உயர்வும் இருக்காது மேலும் அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வும் கொடுக்கப்படாது.

சம்பள குறைப்பு

சம்பள குறைப்பு

இந்தியாவில் ஏற்கனவே பல நிறுவனங்களின் தலைவர்கள் தானாகவே முன்வந்து கொரோனா
தாக்கத்தின் காரணமாகச் சம்பள குறைப்பை அறிவித்துள்ள நிலையில் எஞ்சியுள்ள நிறுவனத்தின் தலைவர்களுக்கு நிறுவனத்தின் நிதிநிலை வைத்து கணக்கிடும் போது இந்த வருடம் சம்பள உயர்வு கிடைக்காது. ஆனால் வேரியபில் பே அளவீட்டில் மட்டுமே கணிசமான உயர்வு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

 

தலைவர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு

தலைவர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு

மேலும் வர்த்தகச் சந்தையும் நிறுவனங்களின் நிலையும் மோசமாக இருக்கும் இந்த வேளையில் நிறுவனத் தலைவர்களுக்குச் சம்பள உயர்வைக் கொடுப்பது சரியானது அல்ல என்பதே இந்தியா நிறுவனங்களின் நிர்வாகக் குழுவின் கருத்து.

ஊழியர்களின் நிலை

ஊழியர்களின் நிலை

இந்தியாவில் பல நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, ஊழியர்களுக்குச் சம்பளம் குறைக்கப்பட்டு, ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு ரத்து செய்யப்பட்டுப் பல கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர், இந்த நிலையில் உயர் அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வு கொடுக்கப்படுவது முற்றிலும் தவறு என முன்னணி வேலைவாய்ப்பு நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+