இந்தியா நான்காவது பெரிய பொருளாதாரம்.. ஆனால்.. ஏன் மக்கள் இன்னும் வருமையில் இருக்கிறார்கள்?

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறி இருக்கிறது. இது நமது நாட்டின் வளர்ச்சியில் ஒரு பெரும் படி என்று அனைவரும் கூறுகிறார்கள். ஆனால், பொருளாதாரம் வளர்ந்தாலும், நம் நாட்டில் ஒவ்வொருவரும் வாழ்க்கை தரம் அதே வேகத்தில் மேம்பட்டு இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. பொருளாதார வளர்ச்சி நிச்சயம் முக்கியம், ஆனால் அந்த வளர்ச்சி எவ்வாறு நம் மக்கள் அனைவரின் வாழ்க்கையில் உண்மையாக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதும் முக்கியம்.

பொருளாதாரம் வளர்ந்தாலும், ஒவ்வொருவரின் சம்பளம் குறைவாகவே உள்ளது: இந்தியாவின் மொத்த பொருளாதாரம் வளர்ந்தாலும், ஒரு மனிதனுக்கு சராசரியாக கிடைக்கும் பணம் மிகக் குறைவாக இருக்கிறது. உலகளவில் இது 138வது இடத்தில் உள்ளது. சீனா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு இது ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும். அதனால், எல்லா மக்களும் பொருளாதார வளர்ச்சியின் நன்மையை பெறவில்லை.

இந்தியா நான்காவது பெரிய பொருளாதாரம்.. ஆனால்.. ஏன் மக்கள் இன்னும் வருமையில் இருக்கிறார்கள்?

மக்கள் வாங்கும் பொருட்கள் அதிகரிக்கிறதா?: நாட்டில் பெரும்பாலான பொருளாதார வளர்ச்சி தனியார் நுகர்வால் (கடைகள், வீட்டு பொருட்கள் வாங்குதல்) வருகிறது. ஆனால் கிராமப்புற மக்கள் இன்னும் பொருட்கள் வாங்குவதில் பின்னடைவு உள்ளது. ஊதியமும் குறைவு. நகரங்களில் மக்களின் செலவு கிராமங்களில் உள்ள மக்களைவிட 5 மடங்கு கூட அதிகம்.

இந்தியா சேவைத் துறை: தகவல் தொழில்நுட்பம் (IT) போன்ற சேவை துறைகள் நல்ல வருமானம் ஈட்டுகின்றன. ஆனால் இந்த துறையில் வேலை செய்யும் மக்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. மற்றப்பகுதிகளில் மக்கள் பெரும்பாலும் பாதுகாப்பற்ற வேலைகளைச் செய்கின்றனர். இந்தியாவின் வெளிநாட்டு நாணய கையிருப்பு அதிகமாக உள்ளது. இதனால் பொருளாதாரம் உறுதியாக உள்ளது. மேலும், எண்ணெய் விலை குறைந்ததால் அரசு செலவு குறைக்க முடிந்தது. ஆனால் இந்த நன்மைகள் மருத்துவம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இன்னும் அதிகமாக செலவழிக்கப்படவில்லை.

முதலீடு அதிகரித்தது ஆனாலும் மக்கள் நலனில் செலவு குறைவு: நாட்டு கட்டுமானத்துக்கும் தொழிற்சாலைகளுக்கும் முதலீடு அதிகமாகிறது. ஆனால் அரசாங்கம் மருத்துவம் மற்றும் கல்விக்கு செலவு மிகவும் குறைவாக வைத்துள்ளது. இதனால் மக்கள் ஆரோக்கியமாகவும், நல்ல கல்வி பெற்று வாழ்வதற்கும் சிரமம் அதிகம். இந்தியா மனித மேம்பாட்டு பட்டியலில் 132வது இடத்தில் உள்ளது. மக்கள் சராசரியாக 6.7 ஆண்டுகள் மட்டும் பள்ளியில் படிக்கிறார்கள். சுகாதார வசதிகள் இன்னும் பாதிப்படைவது, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவு போன்ற பிரச்சினைகள் கிராமப்புறங்களில் அதிகம்.

இந்நிலையில், நாட்டின் செல்வத்தில் 10% மக்கள் 77% செல்வத்தை வைத்திருக்கின்றனர். பணம் சிலருக்கு மட்டும் தான் அதிகமாகும். இந்த சமத்துவம் இல்லாமை வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவில்லை. எனினும், இந்தியா மிக பெரிய பொருளாதாரமாக இருக்கலாம், ஆனால் மக்கள் வாழ்க்கை இன்னும் மேம்பட வேண்டும். இந்தியா நான்காவது பெரிய பொருளாதாரமாக இருப்பது மிகப்பெரிய சாதனை. ஆனால் அது மட்டும் போதாது. மக்கள் அனைவரும் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும். கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு எல்லாவற்றிலும் மக்கள் நலன் மேம்பட வேண்டும். இதையடுத்து, இந்த வளர்ச்சி அனைவருக்கும் சமமாக பகிரப்படாத வரை, நமது முன்னேற்றம் முழுமையில்லை என்று சொல்லலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+