டெல்லி: சர்வதேச அளவில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படக்கூடிய சோலார் பேனல்கள் ஏற்றுமதியில் இந்தியா முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவில் அதிக அளவில் சோலார் பேனல்களை ஏற்றுமதி செய்யும் ஆறாவது பெரிய நாடு இந்தியா என்ற பெருமை தற்போது கிடைத்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டில் இந்தியாவில் சோலார் போட்டோவோல்டாய்க் ( solar photovoltaic) எனப்படும் சோலார் பிவி ஏற்றுமதி 0.4 சதவீதமாக இருந்து 2023 ஆம் ஆண்டில் 2.51 சதவீதம் என உயர்ந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் 200.8 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான சோலார் பிவிக்களை ஏற்றுமதி செய்து வந்த இந்தியா 10 ஆண்டுகளில் அதனை 1.83 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு உயர்த்தி உள்ளது.

2025 ஆம் நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இந்தியா 711.95 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பிவி செல்களை ஒருங்கிணைத்து பேனல்களாக மாற்றி ஏற்றுமதி செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படக்கூடிய சோலார் பேனல்களில் 96 சதவீதம் அமெரிக்காவிற்கு சென்றது தெரியவந்துள்ளது. அதேபோல பேனல்களாக மாற்றப்படாத பிவி செல்களை மட்டும் கூட இந்தியா ஏற்றுமதி செய்கிறது. அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 25 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பிவி செல்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் 90% அமெரிக்காவிற்கு சென்றுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் சோலார் PV உற்பத்தியாளர்கள்
1. விக்ரம் சோலார் - சென்னை
2. #டாடா பவர் சோலார் - திருநெல்வேலி
3. AXITEC - திருவள்ளூர்
சர்வதேச அளவில் சோலார் மின் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் அதற்கான உபகரணங்கள் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவும் சோலார் பேனல்கள் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் பல மடங்கு வளர்ச்சி அடைந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தியா நடப்பாண்டில் 7 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சோலார் மின் உற்பத்திக்கு தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்துள்ளது இதில் 62% சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது பல்வேறு நாடுகளும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. இதில் முக்கியமாக சூரிய ஒளி சக்தியின் மூலம் மின் உற்பத்தி செய்வதற்காக சோலார் பேனல்களை அமைக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிர படுத்தியுள்ளன.
எனவே சோலார் பேனல்கள் மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு தேவையான உபகரணங்களுக்கான தேவை வரும் காலங்களில் அதிகரிக்கும் என்பதால் இந்த துறையில் இந்தியாவின் ஏற்றுமதி இன்னும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

பட்ஜெட் மாசத்துல மத்திய அரசுக்கு பணமழை: 8% உயர்ந்த ஜிஎஸ்டி வருவாய்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications