இந்தியா மற்றும் மாலத்தீவுகள் இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாக, திங்களன்று 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது மாலத்தீவு நாட்டின் வெளிநாட்டு பரிவர்த்தனை இருப்பு பிரச்சினைகளை சமாளிக்க உதவும் என்று கூறப்படுகிறது. மாலத்தீவு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில் அதிபர் முகமது முய்சு இந்தியாவிடம் உதவி கோரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
நாணய பரிமாற்றம் என்றால் என்ன?: நாணய பரிமாற்றம் என்பது இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தமாகும். அதாவது வெளிநாட்டு நாணயத்தில் ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு கடன் வழங்க ஒப்புக் கொள்வதே நாணய பரிமாற்ற ஒப்பந்தமாகும். கடனை பெற்றுக் கொள்ளும் நாடு அதை வட்டியுடன் குறிப்பிட்ட தேதிக்குள் திருப்பி செலுத்த வேண்டும். இதை ஒரு உதாரணத்தின் மூலம் தெரிந்து கொள்வோம். ஒரு நாட்டுக்கு 5 மில்லியன் டாலர் மதிப்பிலான பரிமாற்ற ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதாக வைத்துக் கொள்வோம். பின்னர் இந்தியா அந்த நாட்டுக்கு டாலரில் கடனை வழங்கும். பதிலுக்கு கடன் பெறும் நாடு இந்திய ரூபாயில் பணத்தை நிலையான வட்டி விகிதத்தில் திருப்பித் தர வேண்டும். வெளிநாட்டு இருப்பு குறைவாக உள்ள நாடுகளுக்கு இந்த நாணய பரிமாற்றம் உதவும்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முகமது முய்சு ஆகியோர் இணைந்து மாலத்தீவில் ரூபே கார்டை அறிமுகப்படுத்தினர். ஹனிமதூ சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஓடுபாதையையும் திறந்து வைத்தனர். நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள முகமது முய்சு, ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த ஆண்டு மாலத்தீவில் நடைபெற்ற தேர்தலின் போது "இந்தியாவே வெளியேறு" என்ற கொள்கையின் மூலம் முகமது முய்சு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் மட்டும் வெற்றி பெற்றால் இந்தியாவின் ஒட்டுமொத்த செல்வாக்கையும் குறைப்பதாகவும் உறுதியளித்தார். அதன் பிறகு தேர்தலில் வெற்றியும் பெற்றார். முகமது முய்சு அதிபராக பதவியேற்ற பிறகு இருநாட்டு உறவுகளும் மோசமடைந்து வந்தன. தேர்தலுக்குப் பிறகு முகமது முய்சு இந்தியா வந்தது இதுவே முதல் முறை. தற்போது இரு நாட்டு உறவை வலுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, EXIM வங்கியின் கடன் மூலம் கட்டப்பட்ட 700 வீடுகளை மாலத்தீவுக்கு இந்தியா ஒப்படைத்தது. இந்தியாவும் மாலத்தீவும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதம் நடத்த முடிவு செய்துள்ளதாக மோடி தெரிவித்தார்.
இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் ஒரு முக்கிய இடத்தை மாலத்தீவு பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கு மாலத்தீவு நெருங்கிய நண்பன் என்று பிரதமர் மோடி விவரித்தார். இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளின் பொறுப்புகளையும் சேர்த்து நிறைவேற்றும் என்று பிரதமர் மோடி விவரித்தார்.
முன்னதாக, ஜனாதிபதி திரௌபதி முர்முவால் ராஷ்டிரபதி பவனில் முய்ஸுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக ராஜ்காட்டில் இருந்து கீழே இறங்கிச் செல்லும் முன் முய்ஸுவுக்கு முப்படைகளின் பாதுகாப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இதற்கு முன்னர் பிரச்சாரங்களில் ஈடுபட்டாலும் அதன் பிறகு விரோத நிலைப்பாட்டை குறைத்துக் கொண்டார் முய்சு. மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் மோடியை விமர்சித்ததால் இருதரப்பு உறவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால் முய்சு, இந்திய பிரதமரை விமர்சித்த தனது அமைச்சர்களை பதவி நீக்கம் செய்தார். மாலத்தீவு கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்து வரும் நிலையில், மாலத்தீவு அரசாங்கத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications