பழைய பாத்திரங்களை கூட மக்கள் விட்டு வைக்கல.. ஒரே வாரத்தில் 100 டன் வெள்ளி விற்பனை.. என்ன காரணம்..?

இந்தியாவில் வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவுக்கு ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனால், வீட்டில் சேமித்து வைத்திருந்த பழைய வெள்ளியை விற்றுப் பணமாக மாற்றும் முயற்சியில் மக்கள் இறங்கியுள்ளனர். பொதுவாக சில மாதங்களில் சந்தைக்கு வரும் பழைய வெள்ளியின் அளவு, இப்போது ஒரே ஒரு வாரத்தில் வந்து குவிந்துள்ளது.

வெள்ளியை விற்க காரணம் என்ன..?: இந்திய பொன் மற்றும் நகைகள் சங்கம் (IBJA) வெளியிட்டுள்ள தகவலின்படி, பொதுவாக ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 10 முதல் 15 டன் பழைய வெள்ளிதான் விற்பனைக்கு வரும். ஆனால், வெள்ளியின் விலை பல மடங்கு கூடியதால், இப்போது ஒரே ஒரு வாரத்தில் சுமார் 100 டன் பழைய வெள்ளி விற்பனைக்கு வந்துள்ளது.

பழைய பாத்திரங்களை கூட மக்கள் விட்டு வைக்கல.. ஒரே வாரத்தில் 100 டன் வெள்ளி விற்பனை.. என்ன காரணம்..?

கடந்த புதன்கிழமை அன்று வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு சாதனை அளவான ரூ.1,78,684-ஐ தொட்டது. இந்த விலையானது, சமீபத்தில் இருந்த குறைந்த விலையை விட சுமார் 20% அதிகமாகும். இந்த திடீர் விலை உயர்வுதான் பல குடும்பங்களை தங்கள் வெள்ளிப் பொருட்களை விற்று, கையில் பணமாக மாற்ற தூண்டிய முக்கியக் காரணமாகும்.

IBJA-வின் செயலாளர் சுரேந்திர மேத்தா கூறுகையில், "விலை கூடியதால் கிடைத்த லாபத்தைப் பயன்படுத்திக் கொள்ள பலர் வெள்ளியை விற்கிறார்கள். மேலும், இப்போது இந்தியாவில் திருமணங்கள், முக்கியப் பண்டிகைகள் மற்றும் விடுமுறைப் பயணங்கள் அதிகமாக இருப்பதால், வீட்டுச் செலவுகளுக்கும், அவசர தேவைகளுக்கும் மக்களுக்குப் பணம் தேவைப்படுகிறது. இதற்காகவே, வீட்டில் இருந்த பழைய வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் நகைத் துண்டுகளை மக்கள் அதிகம் விற்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

தங்கம் கூட இந்த ஆண்டு 60% வரைதான் விலை கூடியது. ஆனால், வெள்ளி விலை 2024 ஆம் ஆண்டில் ஒரு கிலோ ரூ.86,005 ஆக இருந்த நிலையில் இருந்து, இப்போது இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் நல்ல லாபம் ஈட்டியுள்ளனர்.

எதிர்காலத்தில் ரூ.2 லட்சம் தாண்டுமா..?: வெள்ளியின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருப்பதால், அது விரைவில் ஒரு கிலோ ரூ.2 லட்சம் என்ற இலக்கைத் தொடும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். மோதிலால் ஓஸ்வால் நிறுவனத்தின் ஆய்வுத் தலைவர் நவீன் தமானி, "வெள்ளிக்கான தேவைக்கும், அது கிடைப்பதற்கும் உள்ள பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், இந்த விலையேற்றம் இத்துடன் நிற்காது" என்று உறுதியாக கூறுகிறார். அவருடைய கணிப்புப்படி, 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ரூ.2 லட்சம் வரையும், அடுத்த ஆண்டின் இறுதியில் ரூ.2.4 லட்சம் வரையும் கூட வெள்ளியின் விலை உயர வாய்ப்புள்ளது.

இந்த விலையேற்றத்திற்கு காரணம், உலக அளவில் வெள்ளியின் பற்றாக்குறை தொடர்ந்து நீடிப்பதுதான். வெள்ளி தனியாக சுரங்கங்களில் அதிகம் கிடைப்பதில்லை. தங்கம் மற்றும் சில உலோகங்களை எடுக்கும்போது ஒரு துணைப் பொருளாகவே கிடைக்கிறது. இதனால், தேவைக்கு ஏற்ப அதன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க முடியவில்லை. இதன் விளைவாக, சந்தையில் வெள்ளிக்கு தட்டுப்பாடு இருப்பதால், விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+