டெல்லி: இந்தியா பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறது .அண்மையில் தான் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த வகையில் தற்போது மற்றொரு நாட்டுடன் இந்தியா விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பது தெரிய வந்திருக்கிறது.
ஓமன் உடன் பேச்சுவார்த்தை:இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையே நீண்ட காலமாக நட்புறவு இருந்து வருகிறது. இந்த நட்புறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இரு நாடுகளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இதனை அடுத்து விரைவில் ஓமன் மற்றும் இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்:எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை அரபிக் மொழியில் மொழிபெயர்த்து ஓமன் நாட்டு அமைச்சரவையின் ஒப்புதலை பெற வேண்டியது மட்டுமே பாக்கி என்றும் தெரிவித்திருக்கிறது. இருநாட்டு அமைச்சரவைகளும் இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்த உடன் இருநாட்டு தலைவர்களும் இதில் கையெழுத்து விடுவார்கள் என கூறப்பட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்குள் இது நடந்து விடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
உடன்பாடு:கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவிற்கும் ஓமன் நாட்டிற்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது. இதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான இறக்குமதிக்கு வரிகளை குறைப்பது அல்லது முழுவதுமாக நீக்குவது ,தொழில்களுக்கு தடையற்ற வாய்ப்புகளை வழங்குவது மேலும் முதலீடுகளை ஈர்ப்பது என பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பெரும்பாலான பொருட்களுக்கு வரியே இல்லாமல் அனுமதி வழங்குவது என இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.

விரைவில் கையெழுத்து: வளைகுடா கூட்டமைப்பில் இருக்க கூடியா நாடுகளிலேயே இந்தியா அதிகளவு ஏற்றுமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடு ஓமன் ஆகும். இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஓமன் மற்றும் இந்தியா இடையிலான வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும். ஏற்கனவே இந்தியா ஐக்கிய அரபு அமீரகத்தோடு 2022 ஆம் ஆண்டிலேயே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை கையெழுத்துட்டு செயல்படுத்தி வருகிறது .
என்னென்ன பொருட்கள் விலை குறையும்: 2024- 25-ஆம் நிதியாண்டில் ஓமனுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருநாட்டு வர்த்தகத்தின் மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை ஓமனில் இருந்து பெட்ரோலியம் பொருட்கள் மற்றும் யூரியா உள்ளிட்டவற்றை பிரதானமாக இறக்குமதி செய்கிறது. இது தவிர பாலிமர்கள், எத்திலின், பெட்கோக், ஜிப்சம் மற்றும் ரசாயனங்கள், இரும்பு, ஸ்டீல் உள்ளிட்டவற்றை இந்தியா அங்கிருந்து இறக்குமதி செய்கிறது.இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்த பொருட்களின் விலையை குறைக்கும்.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications