அமெரிக்கா அரசு, இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்ததைத் தொடர்ந்து, இந்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு புதிய ஊக்க திட்டங்களை அறிவிக்க முடிவு செய்துள்ளது. இந்த ஊக்க திட்டம் கொரோனா காலக்கட்டத்தில் மத்திய அரசு அறிவித்த ஊக்க திட்டத்தை போல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி பாதிப்பால் ஏற்படும் தாக்கத்தை தணிக்க இத்திட்டம் பயன்படும் என தெரிகிறது.
இதேபோல் இந்த ஊக்க திட்டம் மூலம் இந்திய உற்பத்தியாளர்கள், அமெரிக்காவுக்கு அனுப்பும் பொருட்களை மாற்று சந்தைக்கு பன்முகப்படுத்த போதுமான காலத்தையும், நிதி வாய்ப்புகளையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக மத்திய நிதி அமைச்சகம் ஒரு ஏற்றுமதி ஊக்க திட்டத்தை உருவாக்கி வருவதாகவும், இது ஐரோப்பா, பிரிட்டன், பெரு, சிலி, அர்ஜென்டினா, பிரேசில் போன்ற சந்தைகளில் மாற்று வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தைகளின் முடிவைப் பொறுத்து உறுதி செய்யப்படலாம் என்று அரசு வட்டாரம் கூறியுள்ளதாக மனிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது.
இந்த ஊக்க திட்டங்கள் குறிப்பாக அதிக தொழிலாளர் சார்ந்த ஏற்றுமதிகளை மையமாகக் கொண்டிருக்கும் துறைகளுக்கு அளிக்கப்படும், இதனால் வேலைவாய்ப்பு பாதுகாக்கப்படும். இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே மாற்று சந்தைகளை ஆராய துவங்கியிருக்கும் வேளையில் இத்தகைய ஊக்க திட்டம் இப்பணிகளை வேகப்படுத்தும், அதேபோல் அமெரிக்காவின் புதிய வரி தாக்கத்தை சமாளித்து வர்த்தக பாதிப்புகளை வேகமாக குறைக்க வழிவகை செய்யும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை காரணம் காட்டி, கடந்த வாரம் 25% கூடுதல் வரி அறிவித்தார், இதனால் இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50% வரி உயர்ந்துள்ளது. இந்த முடிவு, ஆகஸ்ட் 2025 இல் அமெரிக்க-இந்திய வர்த்தக உறவில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.
ஆனால், இந்திய அரசு அல்லது தனியார் நிறுவனங்களுக்கு ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்துமாறு எந்த உத்தரவும் இதுவரையில் வெளியாகவில்லை என்று மனிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது. ஒரு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன அதிகாரி கூறுகையில், "இந்தியாவின் வணிக கொள்கையில் மாற்றம் இல்லை. ரஷ்ய எண்ணெய்க்கு எந்த கட்டுப்பாடுகள் அல்லது தடைகளும் இல்லை. டிரம்ப் அறிவித்த வரி வேறு, தடைகள் வேறு" என்று தெளிவுபடுத்தினார்.
இந்தியா இம்மாத இறுதியில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தைகள் தொடங்கினால், வரி விகிதங்களை குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஏற்றுமதியாளர்களை பிற சந்தைகளுக்கு திருப்புவதற்கான ஊக்க திட்டங்கள், இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்கும் முக்கிய படியாக அமையும். இந்த நடவடிக்கைகள், உள்நாட்டு வேலைவாய்ப்பை பாதுகாக்கவும், பன்னாட்டு சந்தைகளில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!



Click it and Unblock the Notifications