அமெரிக்கா அரசு, இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்ததைத் தொடர்ந்து, இந்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு புதிய ஊக்க திட்டங்களை அறிவிக்க முடிவு செய்துள்ளது. இந்த ஊக்க திட்டம் கொரோனா காலக்கட்டத்தில் மத்திய அரசு அறிவித்த ஊக்க திட்டத்தை போல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி பாதிப்பால் ஏற்படும் தாக்கத்தை தணிக்க இத்திட்டம் பயன்படும் என தெரிகிறது.
இதேபோல் இந்த ஊக்க திட்டம் மூலம் இந்திய உற்பத்தியாளர்கள், அமெரிக்காவுக்கு அனுப்பும் பொருட்களை மாற்று சந்தைக்கு பன்முகப்படுத்த போதுமான காலத்தையும், நிதி வாய்ப்புகளையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக மத்திய நிதி அமைச்சகம் ஒரு ஏற்றுமதி ஊக்க திட்டத்தை உருவாக்கி வருவதாகவும், இது ஐரோப்பா, பிரிட்டன், பெரு, சிலி, அர்ஜென்டினா, பிரேசில் போன்ற சந்தைகளில் மாற்று வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தைகளின் முடிவைப் பொறுத்து உறுதி செய்யப்படலாம் என்று அரசு வட்டாரம் கூறியுள்ளதாக மனிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது.
இந்த ஊக்க திட்டங்கள் குறிப்பாக அதிக தொழிலாளர் சார்ந்த ஏற்றுமதிகளை மையமாகக் கொண்டிருக்கும் துறைகளுக்கு அளிக்கப்படும், இதனால் வேலைவாய்ப்பு பாதுகாக்கப்படும். இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே மாற்று சந்தைகளை ஆராய துவங்கியிருக்கும் வேளையில் இத்தகைய ஊக்க திட்டம் இப்பணிகளை வேகப்படுத்தும், அதேபோல் அமெரிக்காவின் புதிய வரி தாக்கத்தை சமாளித்து வர்த்தக பாதிப்புகளை வேகமாக குறைக்க வழிவகை செய்யும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை காரணம் காட்டி, கடந்த வாரம் 25% கூடுதல் வரி அறிவித்தார், இதனால் இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50% வரி உயர்ந்துள்ளது. இந்த முடிவு, ஆகஸ்ட் 2025 இல் அமெரிக்க-இந்திய வர்த்தக உறவில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.
ஆனால், இந்திய அரசு அல்லது தனியார் நிறுவனங்களுக்கு ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்துமாறு எந்த உத்தரவும் இதுவரையில் வெளியாகவில்லை என்று மனிகண்ட்ரோல் தெரிவித்துள்ளது. ஒரு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன அதிகாரி கூறுகையில், "இந்தியாவின் வணிக கொள்கையில் மாற்றம் இல்லை. ரஷ்ய எண்ணெய்க்கு எந்த கட்டுப்பாடுகள் அல்லது தடைகளும் இல்லை. டிரம்ப் அறிவித்த வரி வேறு, தடைகள் வேறு" என்று தெளிவுபடுத்தினார்.
இந்தியா இம்மாத இறுதியில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தைகள் தொடங்கினால், வரி விகிதங்களை குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஏற்றுமதியாளர்களை பிற சந்தைகளுக்கு திருப்புவதற்கான ஊக்க திட்டங்கள், இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்கும் முக்கிய படியாக அமையும். இந்த நடவடிக்கைகள், உள்நாட்டு வேலைவாய்ப்பை பாதுகாக்கவும், பன்னாட்டு சந்தைகளில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாமலேயே போரை முடிக்க போகிறாரா டிரம்ப்? என்ன சொல்லி இருக்காரு பாருங்க!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications