கிரிப்டோகரன்சி முதலீடு குறித்து உலக நாடுகள் அதிரடியான முடிவுகளை எடுத்து வரும் வேளையில் இந்திய அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் முன்பு போலக் கோடி முதலீட்டாளர்கள் பதிவு செய்து பிட்காயின், ஷிபா இனு, டோஜ்காயின், எதிரியம் எனப் பல முன்னணி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வருகின்றனர்.
சமீபத்தில் சீனா கிரிப்டோகரன்சி சார்ந்த அனைத்து வர்த்தகம், உற்பத்தி ஆகியவற்றைத் தடை செய்த நிலையில், முன்னணி நாடுகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அமெரிக்கா பிட்காயின் வாயிலான ETF-க்கு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் பல நாடுகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு அனுமதி கொடுக்கத் துவங்கியது.
கிரிப்டோகரன்சி
இந்திய அரசு கிரிப்டோகரன்சி முதலீட்டுக்கும், அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவிப்பது குறித்து நீண்ட காலமாக ஆய்வு செய்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் நடக்க உள்ள குளிர்காலக் கூட்டத் தொடரில் கிரிப்டோகரன்சி தொடர்பான இறுதி சட்டவரைவுகளைத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் இதில் இந்தியா நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளது.
அரசின் நிலைப்பாடு
இன்றைய நிலையில் கிரிப்டோகரன்சியைத் தடாலடியாகத் தடை செய்ய முடியாது, பல கோடி இந்தியர்கள் அதிகளவிலான தொகையை முதலீடு செய்துள்ளனர். இதனால் வகைப்படுத்தப்படாத இந்தக் கிரிப்டோ சந்தை முதலீட்டை அதிகாரப்பூர்வ முதலீடாக அறிவிக்கவும் முடியாது. இதனால் இந்திய அரசு இரண்டுக்கும் மத்தியில் ஒரு நிலைபாட்டை எடுக்கும் எனக் கருத்து நிலவுகிறது.
ஆய்வு
கிரிப்டோகரன்சி அதிகாரப்பூர்வ முதலீடாக அறிவித்துள்ள 5 நாடுகளில் சாதக பாதகங்கள் உடன், இந்தியர்கள் செய்யப்பட்ட முதலீட்டு அளவுகள், ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்சி மீதான பார்வை ஆகியவை தற்போது கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் மத்திய நிதியமைச்சகத்திடம் முன்னிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
வரி விதிப்பு
இதைத் தொடர்ந்து இந்தியாவில் கிரிப்டோகரன்சி-யை அதிகாரப்பூர்வ முதலீடாக அறிவித்தாலும், அறிவிக்காவிட்டாலும் இந்த முதலீட்டின் மீது வரி விதிப்பு குறித்த முடிவுகளை எடுக்கு முக்கிய ஆவணங்களும் நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் கிரிப்ரோகரன்சியைத் தடை செய்யத் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications