கிரிப்டோகரன்சி முதலீடு குறித்து உலக நாடுகள் அதிரடியான முடிவுகளை எடுத்து வரும் வேளையில் இந்திய அரசு தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் முன்பு போலக் கோடி முதலீட்டாளர்கள் பதிவு செய்து பிட்காயின், ஷிபா இனு, டோஜ்காயின், எதிரியம் எனப் பல முன்னணி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வருகின்றனர்.
சமீபத்தில் சீனா கிரிப்டோகரன்சி சார்ந்த அனைத்து வர்த்தகம், உற்பத்தி ஆகியவற்றைத் தடை செய்த நிலையில், முன்னணி நாடுகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அமெரிக்கா பிட்காயின் வாயிலான ETF-க்கு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் பல நாடுகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு அனுமதி கொடுக்கத் துவங்கியது.
கிரிப்டோகரன்சி
இந்திய அரசு கிரிப்டோகரன்சி முதலீட்டுக்கும், அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவிப்பது குறித்து நீண்ட காலமாக ஆய்வு செய்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் நடக்க உள்ள குளிர்காலக் கூட்டத் தொடரில் கிரிப்டோகரன்சி தொடர்பான இறுதி சட்டவரைவுகளைத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் இதில் இந்தியா நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளது.
அரசின் நிலைப்பாடு
இன்றைய நிலையில் கிரிப்டோகரன்சியைத் தடாலடியாகத் தடை செய்ய முடியாது, பல கோடி இந்தியர்கள் அதிகளவிலான தொகையை முதலீடு செய்துள்ளனர். இதனால் வகைப்படுத்தப்படாத இந்தக் கிரிப்டோ சந்தை முதலீட்டை அதிகாரப்பூர்வ முதலீடாக அறிவிக்கவும் முடியாது. இதனால் இந்திய அரசு இரண்டுக்கும் மத்தியில் ஒரு நிலைபாட்டை எடுக்கும் எனக் கருத்து நிலவுகிறது.
ஆய்வு
கிரிப்டோகரன்சி அதிகாரப்பூர்வ முதலீடாக அறிவித்துள்ள 5 நாடுகளில் சாதக பாதகங்கள் உடன், இந்தியர்கள் செய்யப்பட்ட முதலீட்டு அளவுகள், ரிசர்வ் வங்கி கிரிப்டோகரன்சி மீதான பார்வை ஆகியவை தற்போது கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் மத்திய நிதியமைச்சகத்திடம் முன்னிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
வரி விதிப்பு
இதைத் தொடர்ந்து இந்தியாவில் கிரிப்டோகரன்சி-யை அதிகாரப்பூர்வ முதலீடாக அறிவித்தாலும், அறிவிக்காவிட்டாலும் இந்த முதலீட்டின் மீது வரி விதிப்பு குறித்த முடிவுகளை எடுக்கு முக்கிய ஆவணங்களும் நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் கிரிப்ரோகரன்சியைத் தடை செய்யத் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications