டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரியை விதித்திருக்கிறார். இது இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புதிய வரி விதிப்பானது இந்த மாத இறுதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இந்த சூழலில் இந்திய தபால் துறை முக்கியமான ஒரு முடிவினை எடுத்துள்ளது.
இந்தியா மீது 50% வரி: வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்ப பெரும்பாலான மக்கள் தபால் துறையை தான் நம்புகிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன் என பல நாடுகளுக்கு நம்முடைய தபால் மற்றும் பார்சலை இந்திய தபால் துறை மூலமாக அனுப்பலாம். இந்த சூழலில் அமெரிக்காவில் புதிதாக சுங்க கட்டணம் நடைமுறைக்கு வர இருக்கிறது, இதில் இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரியும் அடங்கும். எனவே இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு இந்திய தபால் துறை ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

தபால் துறை அறிவிப்பு: இந்திய தபால் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி ஆகஸ்ட் 25ஆம் தேதியிலிருந்து அமெரிக்காவுக்கான தபால் சேவையை நிறுத்துவதாக தெரிவித்து இருக்கிறது. அமெரிக்கா இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி விதிப்பு அமிலுக்கு வர இருக்கக்கூடிய சூழலில் இந்திய தபால் துறை இந்த முடிவை எடுத்துள்ளது. அமெரிக்க அரசு வெளியிட்ட நிர்வாக உத்தரவை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவினை எடுத்திருப்பதாக இந்திய தபால் துறை கூறியிருக்கிறது.
பார்சல் அனுப்ப முடியாது: இந்த மாத இறுதியில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களும் அவற்றின் மதிப்பை பொருட்படுத்தாமல் அந்த நாட்டின் மீது அமெரிக்க அரசு விதித்துள்ள இறக்குமதி வரிகளுக்கு உட்பட்டு வசூல் செய்யப்படுமாம். வழக்கமான தபால்/ ஆவணம், 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசு பொருட்களுக்கு தொடர்ந்து வரிவிலக்கு அளிக்கப்படும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. இந்த பட்டியலில் இடம்பெறாத மற்ற பார்சல்கள் அனைத்துக்கும் இந்த புதிய விதிமுறைகளின் படி தான் கட்டணம் வசூல் செய்யப்படுமாம்.
அஞ்சல்/ஆவணங்கள் அனுப்பலாம்: எனவே ஆகஸ்ட் 25க்கு பிறகு சரக்குகளை ஏற்க முடியாது என அமெரிக்காவுக்கு செல்லக்கூடிய விமான நிறுவனங்கள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளன , இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கடிதங்கள் , ஆவணங்கள் மற்றும் 100 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பரிசு பொருட்கள் தவிர ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருள்களின் முன்பதிவையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம் என இந்திய தபால் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் திரும்ப வழங்கப்படும்: ஏற்கனவே அமெரிக்காவிற்கு பார்சல் அனுப்ப முன்பதிவு செய்தவர்கள் அதனை ரத்து செய்து அதற்காக செலுத்திய தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என இந்திய தபால் துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அமெரிக்காவிற்கு முழுமையான அஞ்சல் சேவை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications