மேற்கு ஆசியப் போரால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள எல்பிஜி நெருக்கடி, நாட்டின் தனியார் துறை வளர்ச்சியை வெகுவாக குறைத்துள்ளது.இது மார்ச் மாதத்தில் பல ஆண்டுகால குறைந்தபட்ச நிலையை எட்டியுள்ளது. ஏற்றுமதி ஆர்டர்கள் உச்சத்தில் இருந்தாலும், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளும், இந்திய ரூபாயின் வீழ்ச்சியும் லாப வரம்புகளைக் குறைத்துள்ளன.
எஸ்&பி குளோபல் செவ்வாய்க்கிழமை பகிர்ந்த தகவல்படி, இந்தியாவின் தனியார் துறை வளர்ச்சி மார்ச் மாதத்தில் 2022 அக்டோபருக்குப் பிறகு மிகக் குறைந்த வேகத்தில் இருந்தது. பிப்ரவரியில் 58.9 ஆக இருந்த HSBC ஃபிளாஷ் காம்போசிட் PMI, மார்ச்சில் 56.5 ஆகக் குறைந்தது. இது மூன்றரை ஆண்டுகளில் மிக மெதுவான வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்தபோதிலும், உள்நாட்டுத் தேவை குறைந்தது இதற்குக் காரணம்.

நிதியாண்டு முடிவில் ஏற்பட்ட இந்தச் சுணக்கம், இஸ்ரேல்-அமெரிக்கா-ஈரான் போரின் விளைவாகும். உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்திற்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தி, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளை இப்போர் உயர்த்தியுள்ளது. மேற்கு ஆசியப் போர், நிலையற்ற சந்தைச் சூழல் மற்றும் பணவீக்க அழுத்தங்கள் ஆகிய அனைத்தும் வளர்ச்சியைப் பாதித்ததாக நிறுவனங்கள் தெரிவித்தன.
குறிப்பாக, உற்பத்திச் செலவுகள் கடந்த 45 மாதங்களில் இல்லாத அளவுக்கு வேகமாகவும், விற்பனைக் கட்டணங்கள் ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகவும் உயர்ந்தன. இது லாப வரம்புகள் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியதாக எஸ்&பி குளோபல் குறிப்பிட்டது. மேற்கு ஆசியப் போர் சந்தை ஸ்திரமின்மை, பணவீக்கம் மற்றும் நுகர்வோர் நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுத்ததால், உற்பத்தித் துறை வளர்ச்சி மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்தது. மார்ச் மாத தொழிற்சாலை உற்பத்தி, 2021 ஆகஸ்டுக்குப் பிறகு மிக மெதுவாகவே அதிகரித்தது.
மேற்கு ஆசியப் போரின் பொருளாதார தாக்கங்கள் குறித்து பேசிய HSBC-யின் தலைமை இந்தியப் பொருளாதார நிபுணர் ப்ராஞ்சல் பண்டாரி, "எரிசக்தி நெருக்கடி தொடர்ந்து வெளிப்படுவதால், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் இரண்டிலும் உற்பத்தி வளர்ச்சி குறைந்தது. புதிய ஏற்றுமதி ஆர்டர்களில் சாதனை அதிகரிப்பு இருந்தபோதிலும், பலவீனமான உள்நாட்டுத் தேவை புதிய ஆர்டர்களைப் பாதித்து, என்றார்."
அரசு நடத்தும் எஸ்பிஐ வங்கியின் ஆய்வுக் குழு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பகுப்பாய்வில், மேற்கு ஆசிய நெருக்கடியின் தீவிரம் விரைவாக அதிகரித்து வருவதாகக் கூறியது. உடனடி உற்பத்தி நிலையாக இருந்தாலும், உணவுப் பணவீக்கம் மற்றும் உரங்கள், டீசல், தளவாடங்கள் போன்ற உள்ளீட்டுச் செலவுகள் விரைவில் உயரும் என்று எஸ்பிஐ குழு குறிப்பிட்டுள்ளது.
இடையூறுகள் தொடர்ந்தால், வரவிருக்கும் கரீஃப் பருவத்தில் உள்ளீட்டு விலைகள் கணிசமாக உயரக்கூடும் என எஸ்பிஐ ஆய்வுக் குழு எச்சரித்தது. உரங்கள், FMCG, ஜவுளி, தோல், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, ரசாயனங்கள், பெட்ரோகெமிக்கல்கள் உள்ளிட்ட 18 துறைகள் மேற்கு ஆசிய நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன. இவை உள்ளீட்டுச் செலவு அதிகரிப்பு, மூலப்பொருட்கள், கப்பல் போக்குவரத்து தாமதங்கள் மற்றும் LNG பற்றாக்குறை போன்ற வழிகளில் தாக்கம் பெற்றுள்ளன.
போர் மேலும் ஒரு மாதம் நீடித்தால், இந்திய ரூபாய் மதிப்பு ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ96-ஐத் தாண்டிச் செல்லக்கூடும் என்று எஸ்பிஐ ஆராய்ச்சி கணித்துள்ளது. போர் அடுத்த 7-10 நாட்களில் முடிவடைந்தால், உள்நாட்டு நாணயம் டாலருக்கு ரூ91.5 முதல் ரூ94.5 என்ற வரம்பில் வர்த்தகமாகும் என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications