கடற்படைக்கு 26 ரஃபேல் எம் விமானங்கள்.. திங்கட்கிழமை கையெழுத்தாகும் ரூ.63,000 கோடி ஒப்பந்தம்

நம் நாட்டின் கப்பற்படையில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் விக்ராந்த் ஆகிய இரண்டு விமான தாங்கி கப்பல்கள் இப்போது சேவையில் உள்ளது. இந்த விமான தாங்கி கப்பல்களில் மிக் 29 கே போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும், பராமரிப்பு தொடர்பான சிக்கல்கள் காரணமாக தற்போதைய மிக் 29 கே போர் விமானங்களின் கடற்ப குறைவான செயல்திறனை காட்டியுள்ளது. இதனால் போர் விமானங்கள் அவசரமாக தேவைப்படுகின்றன.

இதனையடுத்து இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பல்களின் திறனை பலப்படுத்துவதற்காக, பிரான்சிடமிருந்து ரூ.63,000 கோடிக்கு புதிய ரஃபேல் எம் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த மாத தொடக்கத்தில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு பிரான்சிடமிருந்து புதிய ரஃபேல் எம் போர் விமானங்களை வாங்குதவற்கான ரூ.63,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு இறுதி ஒப்புதல் அளித்தது.

கடற்படைக்கு 26 ரஃபேல் எம் விமானங்கள்.. திங்கட்கிழமை கையெழுத்தாகும் ரூ.63,000 கோடி  ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரஃபேல் போர் விமானங்களின் 26 கடல் வெர்சன்கள் வாங்கப்படும். மேலும் நீண்ட தூர கப்பல் எதிர்ப்பு ஆயுதங்களை உள்ளடக்கிய பேக்கேஜ்-ம் இதில் அடங்கும். இந்த ஒப்பந்தம் இறுதியானதையடுத்து, ஏப்ரல் 28ம் தேதியன்று (திங்கட்கிழமை) ரூ.63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் எம் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டது.

வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ள இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்தார். ஆனால் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவரால் இந்தியா வர முடியவில்லை. இதனால் நாளை மறுநாள் டெல்லியில் நடைபெறும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிிகாரிகள், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் சந்திப்பின்போது புதிய ரஃபேல் எம் போர் விமானங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

இந்த விழாவின் போது, இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கும் இடையே தொலைதூர சந்திப்பும் திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் செய்யப்பட்ட தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் 26 ரஃபேல் எம் போர் விமானங்களை இந்தியாவிடம் பிரான்ஸ் வழங்க வேண்டும் என கூறப்படுகிறது. ரஃபேல் எம் போர் விமானங்கள் வருகைக்கு பிறகு இந்திய கடற்படை மேலும் வலுவடையும்.

இதற்கு முன்பு, பிரான்சிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடி மதிப்பில் மொத்தம் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது அவை இந்திய விமான படையின் அ்ம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில் 36 ரஃபேல் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+