பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி இன்றுவரை ஈரானில் போர் மூன்றாவது வாரமாக தொடர்ந்து வருகிறது. போர் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் வராமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை உயர்ந்த வண்ணம் உள்ளது.
உலக அளவில் கச்சா எண்ணெய் சப்ளை தடை பட்டிருக்கிறது இதனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 107 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. போர் தொடங்குவதற்கு முன்னர் கூட பிரண்ட் கச்சா எண்ணெயின் விலை 70 டாலர்கள் என்ற அளவில்தான் இருந்தது. ஆனால் தற்போது அது 100 டாலர்களுக்கு மேல் தான் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வதால் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருகிறது.

இன்றைய தினம் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.67 ரூபாய் என வரலாற்று உச்சபட்ச விலையை எட்டியுள்ளது. அதாவது ஒரு அமெரிக்க டாலரை வாங்குவதற்கு இந்தியா 92.67 ரூபாய் கொடுக்க வேண்டும். பல்வேறு வணிகங்கள் குறிப்பாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு இந்தியா அமெரிக்க டாலரை தான் கொடுக்க வேண்டும்.
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து கொண்டே வருவதால் கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருட்களை வாங்குவதற்கு கையில் இருக்கக்கூடிய பணத்தை இன்னும் கூடுதலாக கொடுத்து செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இது இந்தியா வசம் இருக்கக்கூடிய ரொக்க கையிருப்பை தொடர்ந்து கரைத்து வருகிறது. இந்திய நிறுவனங்களுக்கு இறக்குமதிக்கான செலவினங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில் தான் மத்திய அரசு ஒரு முக்கியமான முடிவினை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மணிகண்ட்ரோல் வெளியிடக்கூடிய செய்தியின் அடிப்படையில் தற்போது நிலவிவரும் புவிசார் அரசியல் பதட்டங்கள், வெளிப்புற அதிர்ச்சிகர்கள் எண்ணெய் மற்றும் பிற பொருட்களின் இறக்குமதி செலவை பாதுகாக்கும் வகையில் வளைகுடா நாடுகள் உடனான வர்த்தகத்திற்கு உள்ளூர் நாணயங்களை கொண்டே செட்டில் செய்வதற்கான ஒரு கட்டமைப்பை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக கூறுகிறது. அதிகாரிகள் தரப்பில் இந்த தகவல்கள் வெளியானதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளால் இறக்குமதி செலவுகள் அதிகரித்து வர்த்தகம் தடைபடுவதை குறைக்க இந்த நடவடிக்கையை மத்திய அரசு கையில் எடுத்து இருக்கிறதாம். இந்தியா அதிகளவு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை வளைகுடா நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது என்பதால் முதலில் வளைகுடா கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடன் உள்நாட்டு கரன்சியிலேயே வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளதாம்.
இதன்படி சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ,குவைத் ,கத்தார் ஆகிய நாடுகளிடம் அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்யாமல் உள்ளூர் நாணயத்தை கொண்டு வர்த்தகம் செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறதாம். இந்தியாவுக்கு தேவையான 85 சதவீத கச்சா எண்ணெய் இறக்குமதி தான் செய்யப்படுகிறது. இதற்கு அமெரிக்க டாலரை வாங்கி வாங்கி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது இந்தியாவுக்கு பெரிய நிதி சுமையை உண்டாக்குகிறது.
இதனால் வர்த்தக பற்றாக்குறை ஏற்படுவதோடு பணவீக்கம் அதிகரித்து பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்கிறது. ஆனால் உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்யும் போது இந்த பிரச்சினை இருக்காது. எனவே ஈரான் போருக்கான ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமில்லாமல் நீண்ட கால அடிப்படையில் இந்தியாவுக்கு பெருமளவிலான ரூபாயை சேமித்து தரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து அமெரிக்க டாலர் வலுவடைந்து இந்திய ரூபாய் சரிகிறது. ஏற்கனவே இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே 2022 ஆம் ஆண்டு பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி இரு நாடுகளும் தங்களுடைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரக திராம்களில் செட்டில் செய்யும் நடைமுறை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது. இதனை அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளதாம்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்புக்கு குட்டு வைத்த நட்பு நாடுகள்; எங்கள கேட்டா போர் தொடுத்தீங்க என கேள்வி!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

அடிமடியிலேயே கை வைத்த அமெரிக்கா..! கொந்தளிக்கும் ஈரான்..! 2ஆவது வாரத்தில் ஈரான் போர்..!

விழி பிதுங்கி நிற்கும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள்: ஈரான் போரால் பெட்ரோல் விற்பனையில் புது பிரச்சினை

உலகளாவிய எரிசக்தி போட்டி: டாப் 10 பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளதா? வல்லரசுகளுடன் ஒரு ஒப்பீடு!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு இல்லாமல் காக்கும் தென்னிந்தியா: பூமிக்கடியில் மறைந்து கிடக்கும் பொக்கிஷம்

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!



Click it and Unblock the Notifications

