பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக மாறும் இந்தியன் ரயில்வே.. பட்ஜெட்-ல் சூப்பர் அறிவிப்பு..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் அடுத்த 5 வருடத்தில் இந்தியாவில் புதிதாக 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும், கூடுதலாக 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியும் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்

மேலும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என அறிவித்த நிர்மலா சீதாராமன், ரயில்வே துறைக்கான மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
இத்திட்டங்கள் நிர்ணயம் செய்துள்ளபடி நிறைவேற்றப்பட்டால் இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் இன்ஜின் ஆக இந்திய ரயல்வே துறை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பயணிகள் முதல் சரக்கு போக்குவரத்து

பயணிகள் முதல் சரக்கு போக்குவரத்து

இந்தியாவில் பயணிகள் போக்குவரத்து முதல் சரக்கு போக்குவரத்து வரையில் அனைத்தையும் ரயில்வே துறை மூலம் மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எரிபொருள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ரயில்வே துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பெரும் நிதிச் சுமையை மத்திய அரசால் குறைக்க முடியும்.

 400 வந்தே பாரத் ரயில்

400 வந்தே பாரத் ரயில்

2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு அடுத்த 3 வருடத்தில் புதிய தலைமுறை 400 வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 100 கார்கோ ரெட்மினல்

100 கார்கோ ரெட்மினல்

இதேபோல் ரயில் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த 100 பிஎம் கதி சக்தி கார்கோ ரெட்மினல்கள் அடுத்த 3 வருடத்தில் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ரயில் சரக்கு போக்குவரத்து பெரிய அளவில் மேம்படுத்தப்படும்.

 நகரப்புற போக்குவரத்து

நகரப்புற போக்குவரத்து

இதேபோல் நகரப்புற போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய திட்ட வடிவமைப்புகள் அடிப்படையில் சிறப்பான மெட்ரோ சிஸ்டம் உருவாக்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

 ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள்

ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள்

மேலும் ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும் எனப் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியா முழுவதும் இருக்கும் உற்பத்தி பொருட்கள் எளிதாக வர்த்தகச் சந்தைக்குள் கொண்டு வர முடியும்.

 போக்குவரத்து நெருக்கடி

போக்குவரத்து நெருக்கடி

மத்திய அரசின் இந்த அறிவிப்புகள் மூலம் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பது மட்டும் அல்லாமல் பெட்ரோல், டீசல் பயன்பாட்டு அளவை குறைப்பதாக உள்ளது. ஒருபக்கம் ரயில் நிலையங்கள் தொடர்ந்து மேம்பட்டு வரும் நிலையில் புதிய ரயில்களின் அறிமுகத்தால் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த முடியும்.

 வளர்ச்சியின் இன்ஜின்

வளர்ச்சியின் இன்ஜின்

இதுமட்டும் அல்லாமல் நாட்டின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை வளர்ச்சிக்கு இது பெரிய அளவில் உதவும் என நம்பப்படுகிறது. ரயில் சரக்கு போக்குவரத்து மூலம் பொருட்களின் போக்குவரத்துச் செலவுகள் குறைந்து விலைவாசி குறையவும் வாய்ப்பு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+