டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில், இந்தியாவில் 21 நாள் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசியம் தவிர பலவும் முடங்கியுள்ளன. இதற்கிடையில் மக்கள் பலரும் தங்களது வேலையினை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை கூட இழக்கும் நிலை கூட நிலவி வருகிறது.

இப்படி ஒரு நிலையில் தான் இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் 2021ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் வெறும் 3.3% ஆகத்தான் இருக்கும் என்று கணித்துள்ளது. இது முன்பு 5.5% ஆக கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சரி இவ்வளவு குறைப்பதற்கு காரணம், தற்போது நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் ,தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஏப்ரல் இறுதிவரை அமலுக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
இது ஏற்கனவே மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரத்தினை மேலும் பிரச்சனைக்கு கொண்டு செல்லலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் இதன் தாக்கம் 2021ம் நிதியாண்டின் வளர்ச்சியிலும் எதிரொலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இது மட்டும் அல்ல, இந்த மதிப்பீடு நிறுவனம் 2020ம் ஆண்டிற்கான வளர்ச்சியினையும் குறைத்துள்ளது. இது முன்பு 5% ஆக கணித்திருந்த நிலையில் தற்போது அதனை 4.7% ஆக குறைத்துள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில் வளர்ச்சி விகிதம் 3.6% ஆகவும், இதே அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 2.3% ஆகவும் கணித்துள்ளது.
இதே 2021ம் நிதியாண்டில் முதல்பாதி வளர்ச்சியின் சராசரி விகிதம் 2.8% ஆகவும், இரண்டாம் பாதியின் சராசரி விகிதம் 4.3% ஆகவும் கணித்துள்ளது.
சரி இதற்கு என்ன காரணம் ஏன் இந்த அளவுக்கு வீழ்ச்சி காணும் வாருங்கள் பார்க்கலாம். நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலைக்கு மத்தியில் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. மேலும் தற்போது புதிய முதலீடுகளும் வருவதும் கஷ்டம். இதனால் உற்பத்தி துறை பெரிதும் பாதிக்கப்படலாம்.
இது தவிர மக்களின் கையில் பணப்புழக்கம் குறைந்து வருவதால், நுகர்வும் குறைந்து வருகிறது. இதனால் தேவையும் குறைந்து வருகிறது. இது வினியோக சங்கிலியிலும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இது தவிர சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிப்பு, ஹாஸ்பிட்டாலிட்டி செக்டார், சுற்றுலா துறை, விமானத் துறை என பல துறைகள் பலமான பெருத்த அடியினை வாங்கி வருகின்றன. இதனால் இந்த துறைகளில் வளர்ச்சி குறையலாம்.
ஆக இதன் மூலம் நிறுவனங்களின் வருவாயும் குறையும். அரசுக்கு வரவேண்டிய வருவாயும் குறையும். மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலையில் விவசாயத்துறையிலும் சற்று பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது. இப்படியாக சங்கிலித் தொடராக ஒவ்வொரு துறையும் பிரச்சனையை சந்தித்து வரும் நிலையில் வளர்ச்சி விகிதம் குறையலாம் என்பதற்கு சாட்சி சொல்லும் விதமாகத் தான் உள்ளன.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications