இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வேகமேடுத்து வரும் நிலையில் பொருளாதாரம் என்னவாகுமோ? என்ற கவலை தொடர்ந்து இருந்து வருகிறது.
இதற்கிடையில் இந்திய பங்கு சந்தைகளும் சரிந்து வந்தன. ஆனால் இன்று இதெற்கெல்லாம் விதிவிலக்காக இன்று இந்திய பங்கு சந்தைகளும் சற்று ஏற்றம் கண்டுள்ளது. அதன் விளைவாக டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பும் இன்று காலை தொடக்கத்தில் 30 பைசா அதிகரித்து 75.65 ரூபாயாக வர்த்தகமாக தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது (12.15 மணியளவில் ) 75.64 ரூபாயாக வர்த்தகமாகியும் வருகிறது. அமெரிக்கா டாலரின் மதிப்பு சற்று குறைந்தமையால், இந்திய பங்கு சந்தைகளும் சற்றும் ஏற்றம் கண்டு வருகின்றன. மேலும் இந்திய ரூபாயின் மதிப்பும் சற்று ஏற்றம் கண்டுள்ளது.
மேலும் கொரோனா வைரஸினால் ஆரம்ப காலத்தில் அதிகளவில் வெளியேறி வந்த அன்னிய முதலீடுகளுக்கு மத்தியில், தற்போது அது நேர்மறையாக மாறியுள்ளது. இது சற்று குறைந்துள்ளதாகவும், இது உள்ளூர் அலகுக்கு ஆதாரவளிப்பதாகவும் கூறியுள்ளார். எனினும் கொரோனா வைரஸ் குறித்தான கவலைகளும் தொடர்ந்து இருப்பதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்கா சீனா மத்தியில் நிலவி வரும் பதற்றங்கள், இது புதிய வணிகங்களுக்கு வழிவகுக்கும் என்ற உணர்வும் மற்ற நாடுகள் மத்தியில் நிலவி வருகிறது. இது ஆசிய பங்குகள் ஏற்றம் காணவும் வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக ஆசிய நாணயங்கள் சற்று ஏற்றம் கண்டுள்ளன என்று ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் அதன் ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
இதற்கிடையில் தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 146.9 புள்ளிகள் அதிகரித்து, 30,819 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 48 புள்ளிகள் அதிகரித்து 9088 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
இதற்கிடையில் ஆறு நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பு 0.26 சதவீதம் வீழ்ச்சி கண்டு 99.60 டாலராகவும் உள்ளது. எனினும் உள்நாட்டு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்களின் உணர்வுகள் பலவீனமாக இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.