இந்தியாவின் முதல் டிஸ்ப்ளே உற்பத்தி யூனிட் ரூ.24,000 கோடியில் தெலுங்கானா மாநிலத்தில் உருவாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியாவின் முதல் 10 பில்லியன் டாலர் செமிகான் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.24,000 கோடி மூலதனத்தில் டிஸ்ப்ளே ஃபேப் வசதியை அமைக்க தெலுங்கானா மாநிலத்துடன் நகை ஏற்றுமதியாளர் ராஜேஷின் ஏற்றுமதி நிறுவனமான Elest நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் AMOLED டிஸ்ப்ளேக்கள், லித்தியம்-அயன் செல்கள், பேட்டரிகள் மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற புதுமையான தொழில்நுட்ப தயாரிப்புகளை உற்பத்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Elest நிறுவனம்
இதுகுறித்து நேற்று தெலுங்கானா அரசு வெளியிட்ட அறிக்கையில், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், செமிகண்டக்டர்களுக்கு இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக தெலுங்கானாவை மாற்ற வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது. Elest நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட முதலீடு இந்தியாவின் மின்னணுவியல் துறையில் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகும். மேலும் தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய முதலீடுகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
டிஸ்ப்ளே ஃபேப்
உலகெங்கிலும் உள்ள சில மேம்பட்ட ஆராய்ச்சி மையங்களின் தொழில்நுட்பத்தை பயன்படுத்து Elest நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் டிஸ்ப்ளே ஃபேப் வசதியை அமைக்கும்.
6 வது ஜெனரேஷன் டிஸ்ப்ளே
6 வது ஜெனரேஷன் AMOLED டிஸ்ப்ளே ஃபேப் வசதி ஸ்மார்ட்போன்கள், டேப்லெட் கம்ப்யூட்டர்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்றவற்றுக்கான அடுத்த தலைமுறை டிஸ்ப்ளேக்களை Elest நிறுவனம் தயாரிக்கும் என்று தெலுங்கானா தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ் மற்றும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் தலைவர் ராஜேஷ் மேத்தா ஆகிய இருவரும் கூட்டாக அறிவித்தனர்.
தெலுங்கானா
தெலுங்கானாவில் உள்ள டிஸ்ப்ளே ஃபேப் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தில் சிறந்த உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்கும் என்றும், விஞ்ஞானிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட 3,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் மேத்தா கூறினார்.
தொழில்நுட்ப வளர்ச்சி
Elest நிறுவனத்தின் ஆறாவது ஜெனரேசன் AMOLED டிஸ்ப்ளே இந்தியாவில் உற்பத்தி செய்வதால் அது உலகளாவிய ஆர்வத்தை உருவாக்கும் மற்றும் இந்தியாவின் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியை உறுதி செய்யும் என்றும் அவர் மேலும் கூறினார்.
உலக அளவில் இந்தியா
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு டிஸ்ப்ளே ஃபேப் நிறுவனம் உருவாகியிருப்பதை அடுத்து இந்தியாவை உலக அளவில் அது உயர்த்தும் என்று அமைச்சர் கூறினார். மேலும் நம் மாநிலத்தில் டிஸ்ப்ளே ஃபேப் வைத்திருப்பது மாநிலத்தில் செழித்து வரும் எலக்ட்ரானிக்ஸ், ஐடி சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று அரசு நம்புகிறது என்றும், இங்கு உற்பத்தி செய்யப்படும் டிஸ்ப்ளேக்கள் சீனா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் உற்பத்தியாகும் டிஸ்ப்ளேக்களுக்கு இணையானதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications