2020-21ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த நிதி பற்றாக்குறை அளவு இந்தியாவின் ஜிடிபி-யில் 9.3 சதவீதமாக உள்ளது. மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 2020ல் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் அறிவிப்பில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருக்கும் என அறிவித்திருந்தார்.
ஆனால் கொரோனா தொற்றும், லாக்டவுன் அறிவிப்புகளும் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்தையும் சூறையாடிய காரணத்தால் மத்திய அரசின் வருவாய் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டது.
கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன்
2020-21ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் -24.37 சதவீதம் வரையில் சரிந்தது. இதன் பின்பு மத்திய நிதியமைச்சகம் தனது நிதிப் பற்றாக்குறை அளவை மறு ஆய்வு செய்து 9.5 சதவீதமாக அறிவித்தது.
நிதிப் பற்றாக்குறை அளவு
இந்நிலையில் 2020-21ஆம் நிதியாண்டின் முடிவில் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் மொத்த நிதிப் பற்றாக்குறையின் அளவு நிதியமைச்சகம் கணித்ததை விடவும் சற்று குறைவான அளவீடான 9.3 சதவீதம் பதிவு செய்துள்ளது.
இது பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 3.5 சதவீதத்தை விடவும் 2.6 மடங்கு அதிகம்.
18,21,461 கோடி ரூபாய்
இதன் மூலம் நாட்டின் மொத்த நிதிப் பற்றாக்குறையின் அளவீடு 18,21,461 கோடி ரூபாயாக உள்ளது. இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய நிதியமைச்சகம் கடன் பெறவும், அரசு கையிருப்பில் இருக்கும் சொத்துக்கள் மற்றும் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்ய உள்ளது.
2019-20ஆம் நிதியாண்டிலேயே நாட்டின் மொத்த நிதிப்பற்றாக்குறையின் அளவு 4.6 சதவீதமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா Vs இந்தியா
அமெரிக்காவின் ஜிடிபி மார்ச் காலாண்டில் 6.4% உயர்வடைந்த நிலையில் இந்தியா வெறும் 1.6% மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. 2021ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3 சதவீதம் சரிவு. இது 4 வருடத்தின் மோசமான நிலை.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications