2019-ம் ஆண்டு முதல் 2021-ம் தேதி வரையில் இந்தியாவில் வீடுகளில் அதிக கார் உரிமையாளர்கள் உள்ள மாநிலமாக கோவா உள்ளது. கடைசி இடத்தில் பீகார் உள்ளது.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2019-2021 (NFHS-5) அறிக்கையின்படி, இந்தியாவில் 7.5% குடும்பங்கள் கார் வைத்துள்ளார்கள். கடந்த 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1.5% அதிகரித்துள்ளது. 2018 இல், இந்த எண்ணிக்கை 6% ஆக இருந்தது.
கோவா, கேரளா, ஜம்மு காஷ்மீர்
வீடுகளில் அதிக கார் உரிமையாளர்கள் உள்ள மாநில பட்டியலில், கோவா முதலிடத்திலும், கேரளா இரண்டாவது இடத்திலும், ஜம்மு காஷ்மீர் மூன்றாவது இடத்திலும் உள்ளது. கோவாவில், 45.2% குடும்பங்கள் கார் வைத்துள்ளன. இந்த எண்ணிக்கை கேரளாவில் 24.2% ஆகவும், ஜம்மு காஷ்மீரில் 23.7% ஆகவும் உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் 22.1% குடும்பங்கள் சொந்தமாக கார் வைத்துள்ளனர், பஞ்சாபில் இந்த எண்ணிக்கை 21.9% மற்றும் நாகாலாந்தில் 21.3% ஆகும்.
வடகிழக்கு மாநிலங்கள்
சிக்கிமில், 20.9% குடும்பங்கள் சொந்தமாக கார் வைத்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்கள் இந்த விஷயத்தில் முன்னணியில் உள்ளன. அருணாச்சல பிரதேசத்தில் 19.3%, மணிப்பூரில் 17.0%, மிசோரமில் 15.5%, மேகாலயாவில் 12.9% மற்றும் அசாமில் 8.1% பேர் கார் வைத்துள்ளனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் ஹிமாச்சலத்திற்கு அடுத்தபடியாக உத்தரகாண்ட் மாநிலத்தில், 12.7% குடும்பங்கள் சொந்தமாக கார் வைத்துள்ளனர்.
தேசிய தலைநகர் டெல்லி
தேசிய தலைநகர் டெல்லியில் 19.4% குடும்பங்கள் சொந்தமாக கார் வைத்துள்ளனர். ஹரியானாவில், 15.3% குடும்பங்கள் கார் வைத்துள்ளன. மக்கள்தொகை அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 5.50% குடும்பங்கள் மட்டுமே சொந்தமாக கார் வைத்துள்ளனர்.
பீகார்
பீகாரில் மிகக் குறைவான குடும்பங்களுக்குச் சொந்தமாக கார் உள்ளது. மாநிலத்தில் 2.0 சதவீத குடும்பங்கள் மட்டுமே சொந்தமாக கார் வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஒடிசாவின் எண்ணிக்கை உள்ளது. ஒடிசாவில், 2.7% வீடுகள் கார் வைத்துள்ளன.
தமிழ்நாடு
மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் 2.8%, ஜார்கண்ட் 4.1%, மத்தியப் பிரதேசம் 5.3%, சத்தீஸ்கர் 4.3%, தெலுங்கானா 5.2%, தமிழ்நாடு 6.5%, கர்நாடகா 9.1%, மகாராஷ்டிரா 8.7%, ராஜஸ்தான் 8.2% மற்றும் குஜராத் 10.9%. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு என்பது ஒரு விரிவான கணக்கெடுப்பு செயல்முறையாகும். இதன் கீழ் அரசாங்கம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இந்திய குடும்பங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து தரவுகளை சேகரித்து இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

50000 ஊழியர்கள் மொத்தமாக பணிநீக்கம்.. உலகின் முன்னணி கார் நிறுவனத்தின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications