டெல்லி : பொதுவாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்கு நாம் அண்டை நாடுகளை சார்ந்தே இருக்கிறோம். சொல்லப் போனால் அங்கிருந்து இறக்குமதி குறைந்தால், இங்கு விலையேற்றம் இருக்கும்.
அதிலும் எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஏதேனும் பிரச்சனை என்றால் இந்தியாவில் விலை தீயாய் பற்றிக் கொண்டு எரியும். ஏனெனில் இந்தியாவில் கால் சதவிகிதம் உற்பத்தி கூட சரிவர இல்லாத நிலையில், நாம் அண்டை நாடுகளையே கையேந்தி நிறுகும் சூழ்நிலை நிலவி வருகிறது.

இப்படியொரு சூழ்நிலையிலும் கூட ஏதோ, சுமார் கால் பங்கு உற்பத்தி செய்யும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் கூட, கடந்த அக்டோபரில் உற்பத்தி குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளன. குறிப்பாக கச்சா எண்ணெய் உற்பத்தி 5.09 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன,. இதே இயற்கை எரிவாயு உற்பத்தியும் மிக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது முந்தைய ஆண்டு இதே கால பகுதியுடன் ஒப்பிடும்போது ஓஎன்ஜிசி மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் தங்களது இலக்கை தவற விட்டதாக, கடந்த செவ்வாய்கிழமையன்று வெளியான அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த அக்டோபர் 2019ல் கச்சா எண்ணெய் உற்பத்தியானது 2,738.44 ஆயிரம் மெட்ரிக் டன் என தெரிவித்துள்ளது. இது மாத இலக்கை விட 7.21 சதவிகிதம் குறைவு என்றும் தெரிவித்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே அக்டோபருடன் ஒப்பிடும்போது 5.09 சதவிகிதம் குறைவாகவும் இருந்தது.
கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 19,110.46 TMT ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் முறையே 4.91 சதவிகிதமாகவும், இதே நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விட 5.3 சதவிகிதம் குறைவாகவும் இருந்தது.
இதே யூனிட் வாரியாக ஆயில் அன்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் 2.97 சதவிகிதம் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்து 1712.93TMT ஆக இருந்ததாக கூறியுள்ளது. இதுவே ஆயில் இந்தியா லிமிடெட் ஆயில் உற்பத்தி 3.66% குறைந்து 272.57 TMT ஆக உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதே இயற்கை எரிவாயு உற்பத்தியில் ஓ.என்.ஜி.சி 7.39 சதவிகிதம் குறைந்து 1954.35 MMSCM ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications