1947இல் சுதந்திரம் அடைந்த போது இந்தியாவின் பொருளாதாரம் எப்படி இருந்தது..?

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருந்தது. ஒரு புறம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டின் செல்வ வளங்களை சுரண்டி இருந்தனர், மறுபுறம் போர்களாலும், சுதந்திர போராட்டங்களாலும் பல பகுதிகள் அழிந்து போயிருந்தன.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையாமல் இருப்பதிலும் பெரும்பாலான பொருட்களுக்கு இறக்குமதியை சார்ந்திருப்பதையும் உறுதிப்படுத்தினர். எனவே 1947 ஆகஸ்ட் 15 அன்று குறைந்த தனிநபர் வருமானம் மற்றும் குறைந்த தேசிய வருமானம் கொண்ட நாடாக இந்தியா இருந்தது.

1947இல் சுதந்திரம் அடைந்த போது இந்தியாவின் பொருளாதாரம் எப்படி இருந்தது..?


பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பணியாற்றிய அல்லது தொழில்துறையினர் தேசிய வருமானத்தில் ஒப்பீட்டளவில் பெரிய பங்கை அனுபவித்து வந்தனர், அதே நேரத்தில் பெரும்பான்மையான ஏழைகள் சிறிய பங்கை பெற்று வந்தனர்.

பெரும்பாலான மக்கள் தொழிலுக்காக விவசாயத்தை நம்பியிருந்தனர். நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்கள் மிகக் குறைவாகவே இருந்தன. அன்அகாடெமி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்தியா சுதந்திரம் அடைந்த அந்த காலகட்டத்தில் இரண்டு பெரிய பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியது ஒன்று வறுமை மற்றொன்று படிப்பறிவு. பெரும்பாலான மக்கள் வறுமையில் இருந்தனர் மேலும் பெரும்பாலான மக்களுக்கு போதிய படிப்பறிவு கிடையாது.

நாட்டில் தகவல் தொடர்பு, போக்குவரத்து மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.விவசாயம் தவிர பெரும்பாலான பொருட்களுக்கு நாம் வெளிநாட்டை தான் சார்ந்து இருந்தோம். இந்தியாவில் அப்போது மக்களின் சராசரி ஆயுட்காலம் கடுமையான அளவு குறைந்திருந்தது.16 சதவீத மக்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றவர்களாக இருந்தனர்.இந்திய மக்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின் தங்கியிருந்தனர்.

1947க்கு முன்பு இந்தியாவில் இந்திய நாட்டின் வருமானத்தில் 95% விவசாய மூலம் மட்டுமே கிடைத்தது கிட்டத்தட்ட 85 % மக்கள் விவசாயத்தை நம்பி மட்டுமே வாழ்ந்து வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இங்கே தொழில்துறையை மேம்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவில் 72% மக்கள் விவசாய தொழில்களில் ஈடுபட்டு வந்தனர், 10.2% மக்கள் உற்பத்தி துறையில் இருந்தனர், 17% மக்கள் அரசு துறைகளிலும் சேவை துறைகளிலும் வணிக துறைகளிலும் பிரிந்து இருந்தனர்.

பெரும்பாலான மக்கள் விவசாயத்தையும் இந்தியா தன்னுடைய வருமானத்திற்காக பெரும்பாலும் விவசாயத்தையுமே சார்ந்து இருந்தது. பிரிந்திருந்த சமஸ்தானங்களை ஒன்றிணைப்பது, மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவது அதற்கு நாட்டின் வருமானத்தை பெருக்குவது என பல்வேறு சிக்கல்கள் இருந்தன.

1947இல் சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை ஆர்.கே.சண்முகம் செட்டி அவர்கள் 26 நவம்பர் அன்று தாக்கல் செய்தார். அப்போது இந்தியாவின் வருமானம் 171.15 கோடி ரூபாய், மொத்த செலவினம் 197.29 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. நிதி பற்றாக்குறை 24.59 கோடி ரூபாயாக இருந்தது. அந்த காலகட்டத்தில், பாதுகாப்பு துறை செலவினம் மட்டும் 92.74 கோடி ரூபாயாக இருந்தது.

உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கவும் வேளாண் மற்றும் பிற துறைகளை வளர்ச்சி அடைய செய்யவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஐந்தாண்டு திட்டங்கள், பசுமைபுரட்சி, உலகமயமாக்கல் என இப்படி படிப்படியாக இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. கூடிய விரைவில் 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்ட பொருளாதாரமாக இந்தியா உயர இருக்கிறது.


Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+