உலகம் முழுக்க இன்று மக்களை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறதோ தெரியவில்லை. ஏனெனில் எல்லாதுறையிலும் தன்னால் முடிந்த மட்டில் ஒரு வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில் இந்தியாவிலும் அது தன்னுடைய வேலையை மிக வேகமாகவும் துரிதமாகவும் செய்து வருகிறது. சொல்லப்போனால் இந்தியாவில் மட்டும் சுமார் 12,38,635 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29,861 பேர் பலியாகியுள்ளனர். ஆக மொத்தத்தில் இந்தியாவினை ஒரு ஆட்டு ஆட்டிப்படைத்து வருகிறது எனலாம்.

இந்த நிலையில் அது மின்சார துறையினையும் விட்டு வைக்கவில்லை எனலாம். ஏனெனில் 2025ம் ஆண்டில் கொரோனா தாக்கம் காரணமாக மின்சார தேவை 7 - 17% வரை குறையக்கூடும் என்கிறது ஓர் அறிக்கை.
இது குறித்து வெளியான எக்னாமிக் டைம்ஸ் செய்தியில், டெரி அமைப்பானது இந்தியாவில் மின்சாரம் தேவையானது 7 - 17% வரை குறையக்கூடும் என்று கணித்துள்ளது. இந்தியாவில் அதிகளவு மின்சாரத்தினை பயன்படுத்தும் மாநிலங்களில் 5 முதல் 15 சதவீதம் வரையில் மின்சார தேவையானது வீழ்ச்சி காணும் என்றும் தெரிவித்துள்ளது.
எப்படி இருப்பினும் லாக்டவுனால் எந்தவித பிரச்சனையும் இல்லை என மத்திய மின் அமைச்சர் ஆக் கே சிங் கூறியுள்ளார். மேலும் இனி வரும் காலங்களில் மின்சார தேவையானது அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். லாக்டவுன் இருந்தபோதிலும் கூட நாங்கள் புத்துயிர் பெற்றோம். நீண்ட காலத்திற்கு மின்சார தேவை பாதிக்கப்படுவதை காணவில்லை. இது மெதுவான வேகத்தில் வளரும். ஆனால் விரைவில் திரும்பி வரும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வணிகத் துறையில் நீடித்து வரும் மந்த நிலை, நிதி நிலைமை, தொடர்ச்சியான வளர்ச்சியின் முடக்க நிலை முக்கியமான பிரச்சனைகளாக இருக்கலாம் என்றும் அறிக்கை கூறியுள்ளது. எனினும் இந்த ஆய்வு கீழ் நோக்கிய திருத்தத்தினை நிராகரிக்கவில்லை. மிகவும் மோசமான போக்குடன் ஒப்பிடும்போது அதன் சரிவை விலக்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்படுகிறது.
உன்மையில் நாம் நினைக்கக்கூடும். மின்சார துறைக்கும் கொரோனாவால் பிரச்சனையா என்று? உண்மையில் பிரச்சனை உண்டு. ஏனெனில் லாக்டவுன் காரணமாக இன்னும் பெரும் பகுதிகளில் பெரும்பாலான நிறுவனங்கள் இயங்க ஆரம்பிக்கவில்லை. அப்படி சில பகுதிகளில் இயங்கி வந்தாலும், அவற்றிற்கும் பல கட்டுப்பாடுகள். ஆக எந்த தொழில் சாலைகளும், நிறுவனங்களும் முன்பைபோல சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. ஆக மின்சார உபயோகத்தில் நிச்சயம் துண்டு விழும் என்பதை தான் நிபுணர்கள் தற்போது கணித்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications