இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன (EV) சந்தை வேகமாக வளர்ந்து வரும் வேளையில் மத்திய அரசு பல வருடங்களாக இத்துறையில் கிங்மேக்கராக இருக்கும் டெஸ்லா-வை இந்தியாவுக்கு கொண்டு வரவும், ஆசியாவுக்கான உற்பத்தி தளமாக இந்தியா இருக்க வேண்டும் என மத்திய அரசு எலான் மஸ்க்-கிடமும், டெஸ்லா நிர்வாகத்திடமும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அனைத்த முயற்சிகளும் தோல்வி அடையும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கனரக தொழில்துறை அமைச்சரான குமாரசாமி திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசும் போது, "டெஸ்லா இந்தியாவில் உற்பத்தி செய்யாமல், வெறுமனே விற்பனை ஷோரூம்-களை திறந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்க விரும்புகிறது." என டெஸ்லா தரப்பின் முடிவை தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லாவின் இந்த முடிவு, இந்திய சந்தையில் எலகட்ரிக் கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தாலும், இப்பிரிவை மேம்படுத்துவதற்கு மற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
எலக்ட்ரிக் கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் மத்திய அரசின் அடுத்தக்கட்ட திட்டம் குறித்து மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகையில், "எலக்ட்ரிக் பயணிகள் கார்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு (SPMEPCI) விரைவில் விண்ணப்பங்கள் பெறப்படும்," என்றார். இந்தத் திட்டம் உலகளாவிய முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, டெஸ்லா கைவிரித்த காரணத்தால் மத்திய அரசு பெரும் சலுகையுடன் மிகப்பெரிய சலுகையை SPMEPCI திட்டத்தின் கீழ் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறத.
ஐரோப்பாவின் மெர்சிடிஸ்-பென்ஸ், ஸ்கோடா-வோக்ஸ்வாகன் (VW), தென் கொரியாவின் ஹூண்டாய், கியா மற்றும் வியட்நாமின் வின்ஃபாஸ்ட் ஆகியவை இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஆர்வம் காட்டியுள்ளன. உலகின் மூன்றாவது பெரிய வாகன சந்தையான இந்தியாவில், இந்நிறுவனங்கள் உற்பத்தி வசதிகளை அமைப்பதற்கு தயாராக உள்ளன.
இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது சந்தை தரவுகளை வைத்து உறுதி செய்ய முடியும். 2020-இல் வெறும் 5,000 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனையான நிலையில், 2024-இல் இது 1,13,000 எலக்ட்ரிக் கார்கள் விற்பனையானது.
தற்போது மொத்த கார் விற்பனையில் எலக்ட்ரிக் வாகனங்கள் 3% மட்டுமே என்றாலும், 2030-ஆம் ஆண்டுக்குள் இது 30% ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த வளர்ச்சி, உலகளாவிய வாகன உற்பத்தியாளர்களுக்கு இந்தியா ஒரு முக்கிய இலக்காக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வின்பாஸ்ட் தமிழ்நாட்டில் பிரம்மாண்ட தொழிற்சாலை அமைத்து உற்பத்தி பணிகளை துவங்க காத்திருக்கும் வேளையில் டெஸ்லா இந்தியாவுக்கு வர மறுப்பு தெரிவித்துள்ளது பிற நிறுவனங்களுக்கும், பிற முதலீடுகளுக்கும் மத்திய அரசு முக்கியதுவம் அளிக்கப்படும்.
மேலும் எலான் மஸ்க் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்க வேண்டாம் என முடிவு செய்ய முக்கிய காரணமாக இருப்பது டொனால்டு டிரம்ப்-ன் அடுத்தடுத்து கொண்டு வந்த நெருக்கடி தான். இந்தியாவில் வெளிநாட்டு கார்களுக்கான இறக்குமதி வரி 100 சதவீதமாக உள்ளது, இது மிகவும் மோசம் என டிரம்ப் விமர்சனம் செய்தார், இதேபோல் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் கார்களுக்கு அதிகப்படியான வரியும் விதித்து அதை திரும்ப பெற்றார். இதனால் எலான் மஸ்க் நிர்வாகத்தால் நீண்ட கால அடிப்படையில் முடிவு எடுக்கப்படவில்லை.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications