இந்தியாவின் ஏற்றுமதி 3 மடங்கு வளர்ச்சி.. ஓரே மாதத்தில் 30 பில்லியன் டாலரை தாண்டியது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏப்ரல் மாத இந்தியாவின் ஏற்றுமதி அளவு சுமார் 3 மடங்கு வளர்ச்சி பதிவு செய்து அசத்தியுள்ளது. ஆனால் இதே காலக்கட்டத்தில் இறக்குமதி அளவு அதிகரித்துள்ள காரணத்தால், தொடர்ந்து வர்த்தகப் பற்றாக்குறையின் அளவீடு அதிகரித்து வருகிறது.

ஏப்ரல் மாதத்தில் இன்ஜினியரிங், நவரத்தினம் மற்றும் நகைகள், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்த காரணத்தால் நாட்டின் ஏற்றுமதி அளவீடு சுமார் மடங்கு அதிகரித்து 30.21 பில்லியன் டாலரை தொட்டு உள்ளது.

 இந்தியாவின் ஏற்றுமதி 3 மடங்கு வளர்ச்சி.. ஓரே மாதத்தில் 30 பில்லியன் டாலரை தாண்டியது..!

கடந்த வருடம் இதே காலகட்டத்தில் அதாவது ஏப்ரல் 2020ல் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு 10.17 பில்லியன் டாலராக இருந்த நிலையில் தற்போது 3 மடங்கு வளர்ச்சி பதிவு செய்துள்ளது.

கொரோனா ஒழிப்பில் அம்பானி, அதானியின் உண்மையான பங்கு என்ன..? டிவிட்டரில் வைரல் பதிவு..!கொரோனா ஒழிப்பில் அம்பானி, அதானியின் உண்மையான பங்கு என்ன..? டிவிட்டரில் வைரல் பதிவு..!

மேலும் ஏப்ரல் 2020ல் நாட்டின் மொத்த இறக்குமதி அளவீடு 17.09 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இதன் அளவு 2021 ஏப்ரல் மாதத்தில் 45.45 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் கடந்த வருடம் 6.92 பில்லியன் டாலராக இருந்த நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு இந்த ஏப்ரல் 2021ல் 15.24 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s exports jumped nearly three-fold to $30.21 billion in April

India’s exports jumped nearly three-fold to $30.21 billion in April
Story first published: Monday, May 3, 2021, 20:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X