2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று முதல் முறையாக டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்தார். எப்போதும் பட்ஜெட் அறிக்கை பேப்பரில் பிரின்ட் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படும் நிலையில், இந்த முறை கொரோனா தொற்று காரணமாக பட்ஜெட் அறிக்கை பிரின்ட் செய்யப்படாமல் டிஜிட்டல் முறையில் விநியோகம் செய்யப்பட்டது.
இதன் வாயிலாக நிர்மலா சீதாராமன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபேட் கொண்டு நாடாளுமன்றத்தில் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார்.
சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் எதிர்பார்த்த வருமான வரி தளர்வு, 80சி பிரிவின் கிடைக்கும் வரி சலுகை உயர்வு என எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் மக்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
ஆனால் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாதது சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது. இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு பட்ஜெட் அறிவிப்பு முடிந்த சில நிமிடங்களில் சுமார் 2000 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட டிஜிட்டல் பட்ஜெட் அறிக்கையின் உங்களுக்காக