பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அன்று, புஜ் மற்றும் அகமதாபாத் இடையே இயக்கப்படும் இந்தியாவின் முதல் "வந்தே மெட்ரோ" சேவையை தொடங்கி வைத்தார். இந்த ரயில் அதிகாரப்பூர்வமாக "நமோ பாரத் ரேபிட் ரெயில்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர் திங்கள்கிழமை அன்றே தனது குஜராத் பயணத்தின் போது பல வந்தே பாரத் ரயில்களையும் திறந்து வைத்தார்.
வந்தே மெட்ரோ நகர்ப்புற பகுதிகளைப் புறநகர் நகரங்களுடன் இணைக்கும் வகையில் பயணிக்கும். "மற்ற மெட்ரோக்கள் குறுகிய தூரங்களையே கடக்கும் நிலையில், வந்தே மெட்ரோ ரயில்கள் நகரத்தின் மையப்பகுதியிலிருந்து புறநகர் நகரங்களுக்கும் செல்லும்" என்று ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார்.

வந்தே மெட்ரோ என்றால் என்ன?: வந்தே மெட்ரோ விரைவு ரயில் என்பது ஒரு குறுகிய தூர சேவையாகும், இது நகரங்களுக்கு இடையேயான ரயில் நெட்வொர்க்கில் 100-250 கிமீ அதாவது 62-155 மைல் தொலைவில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கிறது. நமோ பாரத் ரேபிட் ரயில் ஏப்ரல் 2024-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில் இந்திய அரசின் "மேக் இன் இந்தியா" முயற்சியின் ஒரு பகுதியாக கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியாவில் "நமோ பாரத் விரைவு ரயில்" இயக்கப்படுவதனால் ஏற்படும் நன்மைகள்: அகமதாபாத்-புஜ் வந்தே மெட்ரோ சேவை 9 நிலையங்களில் நின்று 360 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி 45 நிமிடங்களில் 110 கிலோமீட்டர் வேகத்தில் கடக்கும். இதன் மூலம் விரைவாக பல்வேறு இடங்களுக்குச் செல்ல முடியும். இது புஜில் இருந்து காலை 5.05 மணிக்கு புறப்பட்டு 10.50 மணிக்கு அகமதாபாத் சந்திப்பை சென்றடையும்.
இந்த ரயிலில் 12 குளிரூட்டப்பட்ட பெட்டிகள், தானியங்கி கதவுகள், எல்இடி விளக்குகள், வெற்றிட வெளியேற்றத்துடன் கூடிய கழிப்பறைகள், ரூட் மேப் இன்டிகேட்டர்கள், பனோரமிக் ஜன்னல்கள், சிசிடிவி, போன் சார்ஜிங் வசதிகள் மற்றும் அலாரம் மூலம் தானியங்கி புகை அல்லது தீயைக் கண்டறியும் வசதி உள்ளது.
பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி முதல் இந்த ரயில் சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது. முதல் பயணம் அகமதாபாத்தில் இருந்து தொடங்கவுள்ளது. இதற்கான கட்டணம் 455 ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
நமோ பாரத் ரேபிட் ரெயில், அவசரகால விளக்குகளுடன் ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்வதைத் தவிர்ப்பதற்கும், தீயைக் கண்டறிவதற்கும், ஏரோசால் அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டிருக்கும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

150 கிமீ சுற்றளவில் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது சுமார் 3 முதல் 4 மணி நேரம் வசதியான பயணத்தை வழங்குகிறது.
இதற்கிடையில், கோலாப்பூர்-புனே, புனே-ஹூப்பள்ளி, நாக்பூர்-செகந்திராபாத், ஆக்ரா கான்ட் முதல் பனாரஸ், மற்றும் துர்க் முதல் விசாகப்பட்டினம் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். முதல் 20 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் வாரணாசி மற்றும் டெல்லி இடையே இயக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications