இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 செப்டம்பரில் 642.45 பில்லியன் டாலர் என்ற வரலாற்று சாதனையை எட்டிய எட்டு மாதங்களுக்குப் பிறகு, இப்போது 600 பில்லியன் டாலருக்கும் கீழே சரிந்துள்ளது.
இந்த 8 மாதத்தில் 44.73 பில்லியன் டாலர் வெளியேற்ற என்ன காரணம்..? இதனால் இந்தியாவுக்கும் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு..?
என்ன நடந்தது?
ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 2.69 பில்லியன் டாலராக குறைந்து 597.72 பில்லியன் டாலராக உள்ளது. இந்த வீழ்ச்சியுடன், அந்நிய செலாவணி கையிருப்பு செப்டம்பர் 3, 2021 அன்று பதிவு செய்யப்பட்ட 642.45 பில்லியன் டாலரில் இருந்து 44.73 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நாணய சொத்துக்கள்
இந்தியாவின் ஒட்டுமொத்த கையிருப்புகளின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துக்களின் (FCAs) வீழ்ச்சியின் காரணமாக இந்தச் சரிவு ஏற்பட்டது. அந்நிய செலாவணி சொத்துக்களில் டாலர் மட்டும் அல்லாமல் யூரோ, பவுண்ட் மற்றும் யென் போன்ற அமெரிக்க டாலர் அல்லாத நாணயங்களின் வளர்ச்சி மற்றும் சரிவும் எதிரொலிக்கும்.
FPI முதலீட்டாளர்கள்
அந்நிய செலாவணி கையிருப்புக் குறைவதற்கு ஒரு முக்கியக் காரணம் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களால் (FPIs) மூலதன வெளியேற்றம் தான். FPI முதலீட்டாளர்கள் செப்டம்பர் 2021 முதல் சுமார் 21.43 பில்லியன் டாலர் அளவிலான சொத்துக்களை வெளியேற்றினர்.
பெடரல் ரிசர்வ்
இதற்கு முக்கியக் காரணமாக அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் நாணய கொள்கையில் இருந்த தளர்வுகள் குறைத்தது மற்றும் வட்டி விகிதத்தை உயர்த்தியது தான். மார்ச் மாதத்தில் FPI முதலீட்டாளர்கள் சுமார் 6.56 பில்லியன் டாலர்களை வெளியேற்றியது மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
ரஷ்யா-உக்ரைன் போர்
ரஷ்யா-உக்ரைன் போர் வாயிலாகக் கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்தது, மற்ற நாணய மதிப்பின் வீழ்ச்சியைத் தாண்டி டாலருக்கான தேவையும் அதிகமானது. அன்னியச் செலாவணி கையிருப்புச் சரிவில் தங்கத்தின் விலை வீழ்ச்சியும் ஒரு பங்கு வகிக்கிறது.
ரூபாய் மதிப்பு
வெள்ளிக்கிழமை, ரூபாய் மதிப்பு 57 பைசா சரிந்து 76.96 என்ற வரலாற்றுச் சரிவான 76.97 க்கு சற்றுக் கீழ் அளவை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிராக 76.92 இல் முடிவடைந்தது. ரூபாய் மேலும் சரிந்தால், ரிசர்வ் வங்கி தனது அந்நிய செலாவணி இருப்பில் இருந்து டாலர்களை விற்பதன் மூலம் ரூபாய் மதிப்பின் இழப்பைச் சரி செய்ய முடியும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications