நாட்டில் கொரோனாவின் பரவல் வேகமெடுத்து வரும் நிலையில், இந்தியாவின் எரிபொருள் தேவையானது ஆகஸ்ட் மாதத்தில் 16% வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அதன் மிகப்பெரிய மாத சரிவினைக் கண்டுள்ளது.
இந்தியாவில் 43 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 73,890 ஆக அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் சர்வதேச அளவில் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது இந்தியா. அந்தளவுக்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தான் எரிபொருளின் தேவையானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, ஆகஸ்ட் மாதத்தில் 16% வீழ்ச்சி கண்டு, 14.39 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இதே முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 7.5% வீழ்ச்சி கண்டுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் நிச்சயமற்ற நிலையே நிலவி வருகின்றது. இது தொடர்ந்து எரிபொருள் தேவை மீட்பு வேகத்தினை குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் விதமாக போக்குவரத்துகளுக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. இது அதிகப்படியான சரிவினைக் தடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சியுடன் இணைக்கப்பட்ட ஒரு அளவுருவாக டீசல் நுகர்வு உள்ளது. அதோடு இந்தியாவில் ஒட்டுமொத்த சுத்திகரிப்பு மற்றும் விற்பனையில் 40% பங்கு வகிக்கிறது. இது கடந்த ஜூலை மாதத்தில் 5.51 மில்லியன் டன்னிலிருந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 12% குறைந்து 4.85 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இதே ஆண்டு அடிப்படையில் டீசலின் தேவையானது 20.8% வீழ்ச்சி கண்டுள்ளது. ஆக மாதாந்திர டீசல் விற்பனை குறைவது என்பது பொருளாதார வளர்ச்சியினை சுட்டிக் காட்டுகிறது.
இதே பெட்ரோல் விற்பனையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 7.4% குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.38 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது.
எனினும் இது வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பண்டிகை நாட்கள் அதிகம் இருப்பதால் எரிபொருள் தேவையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோங்க.. எரிபொருள் விலையானது கட்டுக்குள் இருந்தால் சரியே.
More From GoodReturns

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

பட்ஜெட் மாசத்துல மத்திய அரசுக்கு பணமழை: 8% உயர்ந்த ஜிஎஸ்டி வருவாய்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசல் விலை தடாலடி உயர்வு.. ஆப்கானிஸ்தான் தாக்குதல் மத்தியில் IMF கொடுத்த நெருக்கடி..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications