டெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் தேவையானது வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவின் எரிபொருள் தேவையானது மீண்டும் பழைய படிக்கு திரும்ப, அடுத்த 6 முதல் 9 மாதங்கள் ஆகலாம் என்று இந்தியன் ஆயில் கார்ப் நிறுவனத்தின் இயக்குனர் எஸ் கே குப்தா தெரிவித்துள்ளார்.
கொரோனா லாக்டவுன் காலத்தில் ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் விற்பனையானது 45.8% சரிந்துள்ளது. எனினும் மே மாதத்தில் இருந்து சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டதால், தற்போது எரிபொருள் தேவையானது சற்று மீளத் தொடங்கியுள்ளது.

எனினும் தற்போது மீண்டும் தினசரி தொற்று விகிதமானது அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் பல இடங்களில் பூட்டுதலை விதிக்கப்படுகின்றன.
முதலீட்டாளர்கள் அழைப்பு குறித்து பேசிய குப்தா, முதல் காலாண்டு வருவாய் பற்றியும் பேசியுள்ளார். மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தேவை மீட்பானது எப்போது இருக்கும் என்பது குறித்து கணிப்பது கடினம் என்றும் தெரிவித்துள்ளார். எனினும் இயல்பு நிலை திரும்ப 6 - 9 மாதங்கள் ஆகலாம் என்றும் குப்தா தெரிவித்துள்ளார்.
மே மாதத்தில் சற்றே தேவை மீண்டு வந்த நிலையில், ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதியில் மீண்டும் குறைந்துவிட்டது.
இந்தியாவில் ஒட்டுமொத்த பெட்ரோலிய பொருட்கள் தேவையில், ஐந்தில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது டீசல். இது முந்தைய மாதத்தினை விட ஜூலை மாதத்தில் 13% குறைந்து 4.85 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இதுவே முந்தைய மாதத்தினை விட 21% ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெட் ரோல் விற்பனையானது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூலை மாதத்தில் 1% குறைந்து 2.03 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இதே முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 11.5% குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதோடு விமான எரிபொருள் விற்பனையும் முந்தைய மாதத்தினை விட ஜூலை மாதத்தில் 4% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த நெருக்கடியான காலத்திலும் தொடர்ந்து அதிகரித்துள்ள ஒரே எரிபொரூள் சமையல் எரிவாயு தான். இது ஜூன் மாதத்தினை விட 10% அதிகரித்து 2.27 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 3.5%அதிகரித்துள்ளது.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

பட்ஜெட் மாசத்துல மத்திய அரசுக்கு பணமழை: 8% உயர்ந்த ஜிஎஸ்டி வருவாய்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications