இந்தியாவின் ஜிடிபி விகிதம் நடப்பு நிதியாண்டில் 8.6 சதவீதமாக வீழ்ச்சி காணலாம் என்று யுபிஎஸ் செக்யூரிட்டீஸ் கணித்துள்ளது. இந்த ஜிடிபி விகிதமானது முன்பு 5.8 சதவீதமாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு இந்தியாவின் வளர்ச்சியினை விரைவில் மீட்க விரைவான நிதி ஊக்கமும் தேவை எனவும் இந்த செக்யூரிட்டீஸ் நிறுவனம் கணித்துள்ளது.
யுபிஎஸ் கவரேஜின் கீழ் உள்ள 42 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஆனால் இந்தியாவில் இன்னும் வீழ்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருப்பதால், ஜிடிபி விகிதத்தினை குறைத்துள்ளோம் என யுபிஎஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெதுவான வளர்ச்சி
உலகின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக ஆசியாவின் பல பகுதிகளில் வளர்ச்சியினை நேர்மறையாக மாற்றியமைக்கிறோம். அவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் காணப்படும் முரண்பாடான விஷயம், இந்தியாவின் வளர்ச்சி மேம்பட்டு வருகிறது. ஆனால் இது மற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது மெதுவான வேகத்தில் உள்ளது என்றும் யுபிஎஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் இந்திய தலைமை பொருளாதார நிபுணர் தன்வீ குப்தா ஜெயின் தெரிவித்துள்ளார்.
பணவீக்க விகிதம்
அதோடு செப்டம்பர் காலாண்டிலும் பணவீக்க விகிதமானது முந்தைய காலாண்டினை இருப்பதை போலவே காண்கிறது. எனினும் டிசம்பர் 2020க்குள் 3.5 - 4% குறையும் எனவும் எதிர்பார்க்கிறது. அடுத்த இரண்டு மாதங்களில் பணவீக்க விகித அபாயங்கள் இருந்தாலும், அக்டோபர் மாதத்திற்கு பிறகு இது சற்று மென்மையாகக் கூடும் என்றும் ஜெயின் கூறியுள்ளார்.
என்ன காரணம்?
இந்த பணவீக்கம் அதிகரிப்புக்கு யுபிஎஸ் மூன்று காரணங்களை கூறுகின்றது. ஒன்று லாக்டவுன் காரணமாக விநியோக சங்கிலி பாதிப்பு, இதனால் பொருட்களின் விலை அதிகரிப்பு. இரண்டாவது வரி அதிகரிப்பினால் எரிபொருட்கள் விலை அதிகரிப்பு, மூன்றாவது சர்வதேச கமாடிட்டிகளில் விலை அதிகரிப்பது. உதாரணத்திற்கு தங்கம் விலை அதிகரிப்பு போன்ற விலைகள் பணவீக்க அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம் என கூறியுள்ளார்.
வளர்ச்சியினை புதுபிக்க மூன்று வழிகள்
அடுத்து வரும் ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில் 25 - 50 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைப்பும் இருக்கலாம் என்றும் யுபிஎஸ் எதிர்பார்க்கிறது. அதோடு பொருளாதார வளர்ச்சியினை புதுபிக்க அரசு மூன்று வழிகளில் செலவினங்களை அதிகரிக்க வேண்டும். ஒன்று உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான நடவடிக்கைகளுக்காக செலவிட வேண்டும். இரண்டாவது ஊரக மற்றும் நகர்புற வேலைவாய்ப்பு திட்டங்களை மேம்படுத்த வேண்டும்.
இந்தியா ஒரு கவர்ச்சிகரமான நாடு
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பார்மா மற்றும் எலக்ட்ரானிக் துறைகளுக்கு அளிக்கப்பட்ட ஊக்கத்தினை மற்ற துறைகளுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும். அதோடு தற்போது சீனாவில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் வெளியேற நினைக்கின்றன. அவைகள் இந்தியாவை ஒரு கவர்ச்சிகரமான இடமாகவும் பார்க்கின்றன. ஏன் அவற்றை இந்தியா வளர்ச்சியினை அதிகரிக்க சாதகமான ஒன்றாக பயன்படுத்தக்கூடாது என்றும் ஜெயின் கூறியுள்ளார்.