இரண்டாம் கொரோனா அலைக்கு மத்தியில் லட்சக்கணக்கானோர் வேலையிழந்த நிலையில், தற்போது தான் பல துறைகளும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்டு வரத் தொடங்கியுள்ளன. இதனால் பணியமர்த்தலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் மே மாதத்தினை காட்டிலும் ஜூன் மாதத்தில் பணியமர்த்தலானது 15% அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
இப்படி பணியமர்த்தும் துறைகளில் ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறைகள் முன்னணியில் உள்ளன.
பணியமர்த்தல் அதிகரிப்பு
இது குறித்த நாக்குரி.காம் அறிக்கையில், ஜூன் மாதத்தில் பணியமர்த்தல் என்பது 15% அதிகரித்துள்ளது. இது ஜூன் மாதத்தில் 2,359 வேலை வாய்ப்புகளாக அதிகரித்துள்ளது. இது கடந்த மே மாதத்தில் 2,047 வாய்ப்புகளாக இருந்தது. அதிகரித்து வரும் ஐடி துறையினரின் தேவைக்கு மத்தியில் ஐடி மற்றும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்களில் பணியமர்த்தல் 5% அதிகரித்துள்ளது.
ஐடி துறையில் வளர்ச்சி
இதே கொரோனாவுக்கு முன்பு ஒப்பிடும்போது (ஜூன் 2019) ஐடி துறையானது 52% வளர்ச்சி கண்டுள்ளது. இது கொரோவினால் நிறுவனங்கள் தங்களின் வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கி வருகின்றனர். இதற்கு பத்தியில் இத்துறையில் தேவை என்பது உயர்ந்துள்ளது. இதனால் பணியமர்த்தலும் அதிகரித்துள்ளது.
தளர்வுகளினால் வளர்ச்சி
அடுத்ததாக சில்லறை, ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் பயணத் துறையும் வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது, ஜூன் மாதத்தில் நாட்டில் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், ஹீட்டல் விமான நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் பயண நிறுவனங்கள் என பலவும் வளர்ச்சி கண்டுள்ளன. மேற்கண்ட இந்த துறைகள் 87% வளர்ச்சி கண்டுள்ளன. இதே சில்லறை வணிகம் 57% அதிகரித்துள்ளது.
இந்த துறைகளிலும் செம வளர்ச்சி
இதே இன்சூரன்ஸ் துறை 38% வளர்ச்சியிலும், வங்கி மற்றும் நிதித்துறையானது 29% வளர்ச்சியிலும், பார்மா துறை மற்றும் பயோடெக் துறையானது 22% வளர்ச்சியும் கண்டுள்ளன. இதே FMCG துறையானது 22% வளர்ச்சியுடனும், கல்வி மற்றும் கற்பித்தல் துறைகள் 15% வளர்ச்சியுடனும், பிபிஓ மற்றும் ஐடி துறையானது 14% வளர்ச்சியும் கண்டுள்ளன.
வேற லெவல் வளர்ச்சி
குறிப்பாக புனேவில் 10% பணியமர்த்தலும், ஹைத்ராபாத்தில் 10% பணிமர்த்தலும், பெங்களூரில் 4% பணியமர்த்தலும் அதிகரித்துள்ளன. இதே மே மாதத்தில் எதிர்மறையான வளர்ச்சியினை கண்டிருந்த டெல்லி என்.சி.ஆர் மற்றும் கொல்கத்தாவில் முறையே 26% மற்றும் 24% வளர்ச்சி கண்டுள்ளன.
தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேவை
இதே இரண்டாம் அடுக்கு நகரங்களாக ஜெய்ப்பூரில் 50%மும், இதே வதோதாராவில் 29% பணியமர்த்தலும் கடந்த மாதத்தினை காட்டிலும் அதிகரித்துள்ளன. குறிப்பாக தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேவை 4% அதிகரித்துள்ளதாகவும் Naukri JobSpeak index தெரிவித்துள்ளது. இதே கற்பித்தல் துறையில் பணியமர்த்தல் என்பது மே மாதத்தினை காட்டிலும் 9% அதிகரித்துள்ளது.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications