இரண்டாம் கொரோனா அலைக்கு மத்தியில் லட்சக்கணக்கானோர் வேலையிழந்த நிலையில், தற்போது தான் பல துறைகளும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்டு வரத் தொடங்கியுள்ளன. இதனால் பணியமர்த்தலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் மே மாதத்தினை காட்டிலும் ஜூன் மாதத்தில் பணியமர்த்தலானது 15% அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
இப்படி பணியமர்த்தும் துறைகளில் ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறைகள் முன்னணியில் உள்ளன.
பணியமர்த்தல் அதிகரிப்பு
இது குறித்த நாக்குரி.காம் அறிக்கையில், ஜூன் மாதத்தில் பணியமர்த்தல் என்பது 15% அதிகரித்துள்ளது. இது ஜூன் மாதத்தில் 2,359 வேலை வாய்ப்புகளாக அதிகரித்துள்ளது. இது கடந்த மே மாதத்தில் 2,047 வாய்ப்புகளாக இருந்தது. அதிகரித்து வரும் ஐடி துறையினரின் தேவைக்கு மத்தியில் ஐடி மற்றும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்களில் பணியமர்த்தல் 5% அதிகரித்துள்ளது.
ஐடி துறையில் வளர்ச்சி
இதே கொரோனாவுக்கு முன்பு ஒப்பிடும்போது (ஜூன் 2019) ஐடி துறையானது 52% வளர்ச்சி கண்டுள்ளது. இது கொரோவினால் நிறுவனங்கள் தங்களின் வணிகங்களை டிஜிட்டல் மயமாக்கி வருகின்றனர். இதற்கு பத்தியில் இத்துறையில் தேவை என்பது உயர்ந்துள்ளது. இதனால் பணியமர்த்தலும் அதிகரித்துள்ளது.
தளர்வுகளினால் வளர்ச்சி
அடுத்ததாக சில்லறை, ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் பயணத் துறையும் வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும்போது, ஜூன் மாதத்தில் நாட்டில் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், ஹீட்டல் விமான நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் பயண நிறுவனங்கள் என பலவும் வளர்ச்சி கண்டுள்ளன. மேற்கண்ட இந்த துறைகள் 87% வளர்ச்சி கண்டுள்ளன. இதே சில்லறை வணிகம் 57% அதிகரித்துள்ளது.
இந்த துறைகளிலும் செம வளர்ச்சி
இதே இன்சூரன்ஸ் துறை 38% வளர்ச்சியிலும், வங்கி மற்றும் நிதித்துறையானது 29% வளர்ச்சியிலும், பார்மா துறை மற்றும் பயோடெக் துறையானது 22% வளர்ச்சியும் கண்டுள்ளன. இதே FMCG துறையானது 22% வளர்ச்சியுடனும், கல்வி மற்றும் கற்பித்தல் துறைகள் 15% வளர்ச்சியுடனும், பிபிஓ மற்றும் ஐடி துறையானது 14% வளர்ச்சியும் கண்டுள்ளன.
வேற லெவல் வளர்ச்சி
குறிப்பாக புனேவில் 10% பணியமர்த்தலும், ஹைத்ராபாத்தில் 10% பணிமர்த்தலும், பெங்களூரில் 4% பணியமர்த்தலும் அதிகரித்துள்ளன. இதே மே மாதத்தில் எதிர்மறையான வளர்ச்சியினை கண்டிருந்த டெல்லி என்.சி.ஆர் மற்றும் கொல்கத்தாவில் முறையே 26% மற்றும் 24% வளர்ச்சி கண்டுள்ளன.
தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேவை
இதே இரண்டாம் அடுக்கு நகரங்களாக ஜெய்ப்பூரில் 50%மும், இதே வதோதாராவில் 29% பணியமர்த்தலும் கடந்த மாதத்தினை காட்டிலும் அதிகரித்துள்ளன. குறிப்பாக தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேவை 4% அதிகரித்துள்ளதாகவும் Naukri JobSpeak index தெரிவித்துள்ளது. இதே கற்பித்தல் துறையில் பணியமர்த்தல் என்பது மே மாதத்தினை காட்டிலும் 9% அதிகரித்துள்ளது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications