ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அடிப்படை சம்பளம் அதிரடி உயர்வு.. என்னென்ன சலுகைகள் கிடைக்கும் தெரியுமா?

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொழிலாளர் குறியீடுகள் (New Labour Codes), நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களின் பணிச்சூழல் மற்றும் ஊதிய கட்டமைப்பில் சில அடிப்படை மாற்றங்களை கொண்டுவர உள்ளன. ஐ.டி. துறையில் ஏற்கனவே நடைமுறைகள் ஒழுங்காக இருந்தாலும், வரும் மாதங்களில் நிறுவனங்கள் அதிக சம்பள செலவுகளையும், புதிய சட்ட விதிகளை இன்னும் ஆழமாக பின்பற்ற வேண்டிய கட்டாயத்தையும் எதிர்கொள்ள நேரிடும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அடிப்படை சம்பளம் உயர்கிறது :புதிய தொழிலாளர் குறியீடுகளில் ஐ.டி. துறைக்கு மிகவும் முக்கியமான மாற்றம், சம்பள வரையறையை தரப்படுத்துவதுதான். இந்த சட்டத்தின்படி, நிறுவனங்கள் ஊழியர்களின் மொத்தச் சம்பளத்தில் (CTC) அடிப்படை சம்பளத்தின் பங்கை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அடிப்படை சம்பளம் அதிரடி உயர்வு.. என்னென்ன சலுகைகள் கிடைக்கும் தெரியுமா?

ஊதிய உயர்வு பலன்கள் : அடிப்படை சம்பளம் உயரும்போது, அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை போன்ற பங்களிப்புகளும் தானாகவே உயரும். இதனால் நடுத்தர மற்றும் மூத்த ஊழியர்கள் ஓய்வூதியத்தின்போது அதிக பணத்தை பெறுவார்கள்.

வார வேலை நேரம் : புதிய விதிகளின்படி, ஒரு வாரத்திற்கான வேலை நேரம் 48 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில துறைகளில் நெகிழ்வு தன்மையுடன் வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை நீட்டிக்கலாம் என்றாலும், வாரத்தில் 6 நாட்களுக்கு குறைவாக வேலை செய்தால், மீதமுள்ள நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக கருதப்பட வேண்டும்.

நிறுவனங்களுக்கு அதிக செலவு :தொழிலாளர்களின் நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், நிறுவனங்களுக்கு கூடுதல் செலவினங்களும் உருவாகியுள்ளன.

மருத்துவப் பரிசோதனை : 40 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் கட்டாய இலவச மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டிய பொறுப்பு நிறுவனங்களுக்கு உள்ளது.

சமூகப் பாதுகாப்பு : பி.எஃப் மற்றும் இ.எஸ்.ஐ. போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் அதிக ஊழியர்களை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், நிறுவனங்களின் ஒட்டுமொத்த செலவு அதிகரிக்கும். இது தொழிலாளர் துறையை மேலும் முறைப்படுத்தவும், முறைசாரா ஊழியர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு கிடைக்கவும் வழிவகுக்கும்.

பெண்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பாதுகாப்பு :புதிய சட்டங்கள், பணியிடத்தில் பாலின சமத்துவத்தை உறுதி செய்கின்றன. பெண்கள் இரவு நேர ஷிப்ட்களை தேர்வு செய்ய முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள், நம்பகமான போக்குவரத்து வசதி மற்றும் புகார் தீர்க்கும் அமைப்புகளை நிறுவனங்கள் கட்டாயம் உருவாக்க வேண்டும். மேலும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஐ.டி. துறையில் அதிக அளவில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களை நிர்வகிக்கும் விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. இதனால், நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இடையேயான செலவு வேறுபாடு குறையும்.

பெரும்பாலான பெரிய ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே பல விதிகளை பின்பற்றினாலும், இந்த மாற்றங்கள் அனைத்தும் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை சட்டரீதியாக மேலும் பலப்படுத்த வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளன. இந்த சட்டங்கள் அமலாவதன் மூலம், ஐ.டி. ஊழியர்களின் நலன் மேம்படுவது உறுதி செய்யப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+