இந்தியாவின் உற்பத்தி விகிதம் குறித்தான பர்சேஸிங் மேனேஜர்ஸ் விகிதமானது கடந்த பிப்ரவரி மாதத்தில், 4 மாதங்களில் குறைந்தபட்ச அளவாக 55.3% ஆக சரிவினைக் கண்டுள்ளது.
இது கடந்த ஜனவரி மாதத்தில் 55.4 சதவீதமாக இருந்தது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் மூலதன செலவினங்களால் சரிவினைக் கண்டு வருகின்றது.
அதே போல வெளி நாடுகளில் இருந்து கிடைக்கும் ஆர்டர்கள் ஓரளவுக்கு மட்டுமே அதிகரித்தன. இதன் காரணமாக தேவையானது சரிவிலேயே காணப்பட்டது. அதேசமயம் செலவினம் என்பது கணிசமாக உயர்ந்துள்ளது.
மூலதன செலவு அதிகரிப்பு
தொடர்ந்து தொழிற்துறையில் மூலதன செலவினங்கள் உயர்ந்து வரும் நிலையில், உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக எரிபொருள், மின்சாதன உதிரி பாகங்கள், உனவு பொருட்கள், உலோகங்கள் மற்றும் ஜவுளித் துறை என பல துறையிலும் மூலதன பொருட்கள் விலையானது உயர்வினைக் கண்டுள்ளது.
பணவீக்கம்
எப்படியிருப்பினும் பணவீக்கம் என்பது ஓரளவு நீண்டகால சராசரிக்கும், இரண்டு ஆண்டு சராசரிக்கும் குறைவாக உள்ளதாக எஸ் & பி கணிப்பு தெரிவித்துள்ளது. பல நிறுவனங்களும் மூலதன செலவு அதிகரித்துள்ள போதில், அதனால் பொருட்கள் விலையை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக நிறுவனங்கள் வாடிக்கையாளார்களுக்கு விற்பனை செய்யும் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளன. எனினும் பெருமபாலான நிறுவனங்கள் தங்களது விற்பனையை அதிகரிக்கும்பொருட்டு, கட்டணத்தை அதிகரிக்காமல் விட்டு விட்டன.
20 மாதங்களாகவே வளர்ச்சி
தொடர்ந்து கடந்த 20 மாதங்களாக அதன் உற்பத்தியானது உயர்ந்து வருவதை காண முடிகின்றது. தொடர்ந்து ஆர்டர்கள் என்பது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், தேவையும் கணிசமான உயர்ந்து வருவதை காண முடிகின்றது என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புதிய வணிக வளர்ச்சி
உள்நாட்டு சந்தை புதிய வணிக வளர்ச்சியின் முக்கிய ஆதாரமாக இருந்தது. வெளி நாடுகளில் இருந்து ஓரளவே ஆர்டர்கள் வந்துள்ளன. சர்வதேச விற்பனை என்பது 11 மாத கால விரிவாக்கத்தில் சரிவில் காணப்படுகின்றது.
எப்படியிருப்பினும் மெதுவான கணிசமான வளர்ச்சியினை பிப்ரவரி மாதத்தில் கண்டுள்ளது. எனினும் தொடர்ந்து மூலதன செலவினங்கள் அதிகரிப்பு உள்ளது. அதேசமயம் தேவை என்பது கணிசமாக உள்ளதால், இது பெரியளவில் தொழில் துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
போதுமான வேலை வாய்ப்பு
நிறுவனங்கள் போதுமான வேலை வாய்ப்பினை உருவாக்க தவறிவிட்டதாகவும், தற்போதைய தேவைகளை சமாளிக்கும் அளவுக்கு தங்களிடம் போதுமான அளவுக்கு பணியாளர்களை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஜிடிபி
இந்தியாவின் ஜிடிபி அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 4.4% வளர்ச்சி அடைந்துள்ளது என மத்திய புள்ளியியல் அமைச்சகம் அதிகாரப்பூர்வ தரவுகளை வெளியிட்டு உள்ளது.
2023-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முந்தைய கணிப்புக்கு இணையாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 7% வளர்ச்சியை பதிவு செய்யும் என கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications