உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அமெரிக்கா, சீனா, பிரிட்டன், இந்தியா உட்பட அனைத்து முன்னணி பொருளாதார நாடாகும் நெட் ஜீரோ அளவீட்டை அடையப் போராடி வருகிறது.
அப்படி இந்தியா மட்டும் நெட் ஜீரோ அளவீட்டை அடைந்தால் பல நன்மைகள் உருவாகும் என உலகப் பொருளாதார அமைப்பு (WEF) அறிவித்துள்ளது.
நெட் ஜீரோ என்றால் என்ன..?
ஒரு நாடு உற்பத்தி செய்யப்படும் கிரீன்ஹவுஸ் வாயு அளவிற்கும், வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்பட்ட கிரீன்ஹவுஸ் வாயு அளவிற்கும் இடையேயான சமநிலை தான் இந்த நெட் ஜீரோ. இதைச் செயல்படுத்த முதலில் கிரீன்ஹவுஸ் வாயு உற்பத்தியைப் பெரிய அளவில் குறைக்க வேண்டும் என்பதே தற்போது உலக நாடுகளின் முக்கிய இலக்காக உள்ளது.
நெட் ஜீரோ இலக்கு
இந்தியா நெட் ஜீரோ இலக்கை அடைய எடுக்கும் முயற்சிகள் மூலம் மட்டுமே 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள், 2070க்குள் 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனக் கணித்துள்ளது உலகப் பொருளாதார அமைப்பு (WEF).
பருவநிலை மாற்றம்
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள காரணத்தால், அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த முயற்சியில் சர்வதேச பொருளாதாரமும் சுத்திகரிக்கப்படும் என உலகப் பொருளாதார அமைப்பு (WEF) தெரிவித்துள்ளது.
சுற்றுசூழல்
மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியா கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் பல வழிகளில் கிரீன்ஹவுஸ் வாயு அதிகளவில் வெளியேற்றப்படுகிறது.
Decarbonisation பயணம்
2070ஆம் ஆண்டு வரையிலான இந்தியாவின் Decarbonisation பயணத்தின் மூலம் சுமார் 15 டிரில்லியன் டாலர் அளவிலான பொருளாதாரத் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளே நெட் ஜீரோ அளவீட்டை அடையப் போராடி வரும் நிலையில் இந்தியாவால் இது சாத்தியமா..?
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications