சீனாவை பகைத்துக் கொள்வதும் இந்தியாவுக்கு பிரச்சனை தான்.. எப்படி.. மோதல் என்ன ஆகும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு பக்கம் கொரோனாவினால் வாடி வதங்கி வரும் மக்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை, நலிவடைந்து வரும் பொருளாதாரம் என சிதைத்துக் கொண்டிருக்கும் நிலையிலும், இன்று மக்களால் அதிகம் பேசப்படுவது? இந்த கொரோனா எப்படி வந்தது? இதற்கு மருந்தே கிடையாதா?

ஏன் உலகளவில் மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனாவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், அதைவிட மக்கள் தொகை குறைவான நாடுகளான அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளை வாட்டி வதைத்து வருகிறதே இந்த கொரோனா, எப்படி, இதற்கு காரணம் என்ன? இப்படி ஓராயிம் கேள்விகள் நமக்குள்.

ஆங்காங்கே மக்கள் கொத்து கொத்தாய் செத்து மடிகின்றனர். ஆனால் சீனாவில் மட்டும் இப்படி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பியது எப்படி? இப்படி பல கேள்விகளே தற்போது சீனாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுக்க காரணமாய் அமைந்துள்ளன எனலாம்.

பல கேள்விகள்?

பல கேள்விகள்?

இது இந்தியாவில் மட்டும் உலகின் பல்வேறு நாடுகளின் பயமும் கேள்வியும் இது தான். இதன் காரணமாக பல நாடுகளின் அரசுகளும் தங்களது நாடுகளை கொரோனாவிடம் மட்டும் அல்ல, பொருளாதார ரீதியிலாகவும் பாதுகாக்க பலவேறு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை தெளிவாக சொல்லப்போனால் சில நாடுகள் இந்த கொடிய கொரோனா என்ற அரக்கம் வேண்டுமேன்றே பரப்பட்டிருக்கலாம். ஏனெனில் பொருளாதாரம் முடங்கி போயுள்ள இந்த நிலையில், சீனாவின் கை மட்டும் ஓங்கியுள்ளது எப்படி? என பல கேள்விகள் எழுப்பட்டு வருகிறது.

எப்படி சாத்தியமானது இந்த முதலீடு?

எப்படி சாத்தியமானது இந்த முதலீடு?

இது இந்தியாவினையும் விட்டு வைக்கவில்லை எனலாம். ஏனெனில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீனாவின் மக்கள் வங்கி ஹெச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 3,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டினை அதிகரித்தது. ஏற்கனவே இந்த நிறுவனத்தின் சீனாவின் மக்கள் வங்கி குறிப்பிட்ட பங்கினை வைத்திருந்தாலும், கொரோனாவின் ருத்ர தாண்டவத்தினால் சீனா பொருளாதாரம் மட்டும் எப்படி சீராக உள்ளது. தனது அன்னிய முதலீடுகளை, அதிலும் கொரோனாவிற்கு பின் கணிசமான அளவு அதிகரித்துள்ளதே எப்படி என பல கேள்விகள் எழாமல் இல்லை.

இந்தியாவுக்கு சற்று பிரச்சனை தான்

இந்தியாவுக்கு சற்று பிரச்சனை தான்

அதெல்லாம் சரி? ஆனால் சீனாவின் முதலீடு இல்லாவிட்டாலும் இந்தியா சற்று பிரச்சனையை சந்திக்க நேரிடுமே என்று கூறுகிறது ஒரு அறிக்கை. எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தி ஒன்றில், இப்படி பீதியானால் செய்யப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறுகிய காலத்திற்கு சரி வரலாம். ஆனால் நீண்டகாலத்திற்கு கேலிகுரியவையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னேற்றம் இல்லை

முன்னேற்றம் இல்லை

மேலும் சந்தர்ப்பவாத முடிவுகளை அரசு எடுத்துள்ளது நல்ல விஷயம் தான். ஆனால் ஆசிய நாடுகளின் சில பொருளாதாரங்கள் மேற்கத்திய முதலீட்டினை பெற்று கைப்பாவைகளாக மாறமல் முன்னேறின. ஆனால் இந்தியா மட்டும் அப்போதிலிருந்து ஏழையாகவே இருந்து வருகிறது. ஆனால் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கும் பிரிட்டனை விட தனி நபர் வருமானத்தில் பணக்காரர்களாக மாறியுள்ளனர். ஆனால் இந்தியாவில் இந்த ஆழமான கருத்துகள் வேரூன்றி இன்னும் மாறமல் இருந்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

2000களில் வளர்ச்சி அமோகம்

2000களில் வளர்ச்சி அமோகம்

கொரோனா என்னும் அரக்கனால் தான் இப்படி ஒரு சித்தபிரமைகள் உருவாகியுள்ளது. ஆனால் 2000களில் இந்தியாவின் வளர்ச்சி அபரிதமாக இருந்தது. ஆண்டு தோறும் 8% வளர்ச்சியினைக் கண்டது. ஏனெனில் அந்த நேரங்களில் அதிகளவிலான அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் அன்னிய போர்ட்போலியோ முதலீடுகளை பெற அனுமதிக்கப்பட்டது. அந்த நேரங்களில் சில நிறுவனங்களின் மதிப்பும் குறைவாகத் தான் இருந்தது. ஆனால் இன்று பல நிறுவனங்களின் மதிப்பும் உயர்ந்துள்ளது.

என்ன ஒரு முட்டாள்தனம்

என்ன ஒரு முட்டாள்தனம்

மைக்ரோசாப்ட், அமேசான். வோடபோன், ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு, ஷெல், ஜெனரல் எலக்ட்ரிக், ஹூண்டாய், வோல்க்ஸ்வேகன், சுசூகி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஜில்லட் மற்றும் நெஸ்லே உள்ளிட்ட அனைத்து உலகின் மிகப்பெரிய 500 நிறுவனங்களில் சில இப்போது இந்தியாவிலும் அதன் செயல்பாடுகளை கொண்டுள்ளன. மேலும் பல நுகர்வோர் பொருட்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து பிரச்சனையாக மாறியுள்ளதா என்ன? இது முட்டாள் தனம்.

சீனா முதலீடு

சீனா முதலீடு

சீனா தற்போது குறிப்பிடத்தக்க வெளிநாட்டு முதலீட்டாளராக மாறிவிட்டது. டிசம்பர் 2019 நிலவரப்படி, இந்தியாவில் சீனாவின் ஒட்டுமொத்த முதலீடு 8 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. கடந்த தசாப்தத்தில் சீனா தொழில்நுட்ப ரீதியாகவும், நிதி ரீதியாகவும் சக்தி வாய்ந்ததாகவும் மாறியுள்ளது. ஆனால் அமெரிக்கா நிறுவனங்களைப் போல எங்கும் வலுவாக இல்லை.

முதலீடுகள் தேவை

முதலீடுகள் தேவை

1960 மற்றும் 1970 களில் அமெரிக்கா நிறுவனங்கள் எங்கும் இருந்ததைப் போல எங்கும் ஆதிக்கம் செலுத்தவில்லை. அமெரிக்கா தொழில் நுட்பத்தினையும் முதலீடுகளையும் பயன்படுத்தி சில நாடுகள் அப்போது முன்னேறின. இன்று அதைப்போலத் தான் சீனாவும், அதன் முதலீடுகளும். இந்தியாவின் 23 யூனிகார்ன்களில், 18 சீனாவிடமிருந்து சில முதலீடுகளை பெற்றுள்ளன. இவற்றில் பல கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் மீண்டும் முதலீடுகள் தேவைப்படுகின்றன.

பல யுனிகார்ன்களின் நிலை கேள்விக்குறிதான்

பல யுனிகார்ன்களின் நிலை கேள்விக்குறிதான்

ஆனால் தற்போது அரசின் கொள்கையால் அவை மீண்டும் முதலீடு கிடைக்குமா? அப்படி கிடைக்காவிட்டால் அத்தகைய நிறுவனங்களின் நிலை கேள்விக்குறிதான். இவற்றில் ஒயோ, பேடிஎம், பைஜூ, மேக்மைடிரிப், ஸ்விக்கி என பல அடங்கும். ஆக இவர்களை காப்பாற்ற யாரால் முடியும். மந்தமான பங்கு சந்தையில் சந்தர்ப்பவாத கையகப்படுத்தல்களை பொறுத்தவரை எப்படி தெரிந்துகொள்ள முடியும்.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

இந்தியா இன்று கடுமையான நெருக்கடியில் உள்ளது. சாத்தியமான ஒவ்வொரு மூலத்தில் இருந்தும் கூடுதல் முதலீடு தேவைப்படுகிறது. கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்தி இந்திய பங்கு சந்தையில் இருந்து 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக தொகை வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்தியா வெளிநாட்டில் இருந்து கூடுதல் நிதியை பெற முயன்று வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியும் பத்திரங்களில் அன்னிய முதலீட்டினை தாராளமயமாக்கியுள்ளது.

பெரும் நிதி தேவை

பெரும் நிதி தேவை

ஆக அனைத்து வளரும் நாடுகளுக்கும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் இருந்து பெரும் கடன் தொகை தேவைப்படுகிறது. கொரோனாவினால் ஏற்பட்ட மந்த நிலையினை எதிர்கொள்ள இது தேவைப்படுகிறது. இது கடந்த 2008 நிதி நெருக்கடியை விட மோசமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 1930 பிறகு ஏற்பட்டு மிகப் பெரும் மோசமான மந்த நிலையாகவும் பார்க்கப்படுகிறது.

அனைத்து முதலீடுகளும் வேண்டும்

அனைத்து முதலீடுகளும் வேண்டும்

ஆக சீனா உள்பட பல வெளிநாட்டு முதலீடுகளையும் நாம் கவர்ந்திழுக்க வேண்டும். இதனையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது ஒரு தரப்பு. நிச்சயம் மேற்கூறிய காரணங்களும் ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்றாகத்தான் உள்ளது. ஆனால் இந்த சமயத்தினை பயன்படுத்திக் கொண்டு, உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்கும் போது இது இன்னும் நல்ல விஷயமாகத்தான் இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India’s new FDI rules may hurt our country

According to the sources, India must woo all foreign investors, including the China.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X