இந்தியாவின் மிகவும் வயதான கோடீஸ்வரரும், மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் எமரிட்டஸ் சேர்மன் ஆக இருக்கும் கேஷுப் மஹிந்திரா புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 99 ஆகும் நிலையில், முதுமை மற்றும் உடல்நல குறைவால் காலமானார். இவருடைய சொத்து மதிப்பு என்ன..? கேஷுப் மஹிந்திரா-வுக்கும் ஆனந்த் மஹிந்திராவுக்கும் என்ன உறவு..?
2023 ஆம் ஆண்டிற்கான இந்திய பணக்கார பில்லியனர்களின் பட்டியலை சில நாட்களுக்கு முன்பு தான் வெளியிட்டது. இந்த பட்டியலில் பல வருடங்களுக்கு பின்பு மீண்டும் நுழைந்த 99 வயதான கேஷுப் மஹிந்திரா 1.2 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இந்திய பில்லியனர்கள் பட்டியலில் சேர்ந்தார்.

இந்திய பில்லியனர்கள் பட்டியலில் சேர்ந்த சில நாட்களிலேயே கேஷுப் மஹிந்திரா காலமானார். இது மஹிந்திரா குடும்பத்திற்கு மிகவும் வருத்தமான செய்தியாக அமைந்துள்ளது. கேஷுப் மஹிந்திரா 1947 ஆம் ஆண்டில் தனது தந்தையின் நிறுவனத்தில் சேர்ந்தார், 1963 இல் மஹிந்திரா & மஹிந்திராவின் தலைவரானார்.
சுமார் 48 ஆண்டுகள் மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தை வழிநடத்திய பின்னர் 2012 இல் கேஷுப் மஹிந்திரா பதவி விலகினார். இவரை தொடர்ந்து கேஷுப் மஹிந்திராவின் மருமகன், தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா, அவரது வாரிசாக நியமிக்கப்பட்டார்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் கல்லூரியில் பட்டம் பெற்ற கேஷுப் மஹிந்திரா, மஹிந்திரா நிறுவனத்தை, இந்தியாவில் வெறும் வில்லிஸ் ஜீப்களை அசெம்ப்ளி செய்யும் நிறுவனத்தில் இருந்து பல துறையில் வர்த்தகம் செய்யும் கூட்டு நிறுவனமாக மாற்றியதில் பெரும் பங்கு கேஷுப் மஹிந்திரா-வுக்கு உண்டு.

இன்று மஹிந்திரா குழுமம் 19 பில்லியன் டாலர் அளவுக்கு மதிப்பிடப்படுகிறது, இந்த மாபெரும் வளர்ச்சி பாதைக்கு 48 ஆண்டுகள் மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தை வழிநடத்திய கேஷுப் மஹிந்திரா-வின் பங்கு மிகவும் முக்கியமானது. மஹிந்திரா & மஹிந்திரா தற்போது டிராக்டர்கள், எஸ்யூவி கார்களுக்கு பெயர்பெற்றதாக இருந்தாலும் மென்பொருள் சேவைகள், ஹாஸ்பிடாலிட்டி மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறையிலும் உள்ளது.
கேஷுப் மஹிந்திரா பல அரசு குழுக்களில் இருந்துள்ளது மட்டும் அல்லாமல் 2004 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் பிரதமரின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை குழுவில் இருந்தார். 1987ல் பிரான்ஸ் அரசு கேஷுப் மஹிந்திரா-வுக்கு Chevalier de l'Ordre National de la Legion d'honneur விருதை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications