இந்தியாவில் கடந்த 24 வருடங்களில் இல்லாத அளவுக்கு எரிபொருளுக்காக டிமாண்ட் பிப்ரவரி மாதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் உற்பத்தி துறை தொடர்ந்து வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் ரஷ்யாவில் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கும் காரணத்தால் எரிபொருள் விலை மாறாமல் தொடர்ந்து அதேவிலையில் விற்பனை செய்யப்படுவதால் டிமாண்ட் அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பிப்ரவரி மாதம் இந்தியாவின் எரிபொருள் டிமாண்ட் கடந்த ஆண்டை காட்டிலும் 5 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு நாளுக்கான தேவை என்பது 4.82 மில்லியன் பேரல் ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கடந்த 15 மாதங்களாக இந்தியாவில் தொடர்ந்து எரிபொருள் பயன்பாடு என்பது அதிகரித்துள்ளது.
எண்ணெய் அமைச்சகம்
இதற்கிடையில் மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் Petroleum Planning and Analysis Cell திரட்டிய தரவுகள் படி இந்தியாவில் எரிபொருள் டிமாண்ட் 1998ஆம் ஆண்டு டிமாண்ட் அளவீட்டை எட்டியுள்ளது எந தெரிவித்துள்ளது.
எரிபொருள் டிமாண்ட்
இந்தியாவில் ஒருபக்கம் உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் மறுபுறம் உள்நாட்டு நுகர்வு அதிகமாகவே உள்ளது. இதற்கிடையில் ரஷ்யாவின் தள்ளுபடி விலை கச்சா எண்ணெய் வருகையில் அதிகரிப்பும், அதன் மூலம் அதிகப்படியான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்து ரீடைல் விற்பனையகங்களில் நிரப்பி வைக்கப்பட்டு உள்ள காரணத்தால் எரிபொருள் டிமாண்ட் பிப்ரவரி மாதம் கடந்த ஆண்டை காட்டிலும் 5 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு நாளுக்கான தேவை என்பது 4.82 மில்லியன் பேரல் ஆக உயர்ந்துள்ளது.
5.17 மில்லியன் பேரல்
இந்த நிலை தொடர்ந்தால் மார்ச் மாதம் இந்தியாவில் ஒரு நாளுக்கான எரிபொருள் தேவை என்பது 5.17 மில்லியன் பேரல் ஆக உயரும். ஆனால் பருவகால அடிப்படையில் ஏப்ரல் - மே மாதத்தில் இந்த ஒரு ஒரு நாளுக்கான எரிபொருள் தேவையின் அளவு 5 மில்லியன் பேரல் ஆக குறைய வாய்ப்பு உள்ளது.
பெட்ரோல், டீசல் நுகர்வு
பிப்ரவரி மாதம் இந்தியாவில் பெட்ரோல் நுகர்வு அளவு என்பது 8.9 சதவீதம் அதிகரித்து 2.8 மில்லியன் டன்களாக உள்ளது. டீசல் நுகர்வு 7.5 சதவீதம் அதிகரித்து 6.98 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இதேபோல் விமானத்தில் பயன்படுத்தும் ஜெட் எரிபொருள் 43 சதவீதம் அதிகரித்து 0.62 மில்லியன் டன்னாக அதிகரிக்கும்.
ஜெட் எரிபொருள்
2023 ஆம் ஆண்டு முழுவதும் இந்தியாவில் விமானத்தில் பயன்படுத்தும் ஜெட் எரிபொருளுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து பெட்ரோல், டீசல் ஆகியவை அதிகளவிலான நுகர்வு அளவீட்டை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரீடைல் எரிபொருள் விற்பனை
ஆனால் ரீடைல் எரிபொருள் விற்பனை தரவுகளை பார்க்கும் போது ஜனவரி மாதத்தை விடவும் பிப்ரவரி மாதம் விற்பனை குறைவாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் பிப்ரவரி மாதத்தில் 28 நாள் என்பது தான் என Wood Mackenzie நிறுவனத்தின் துணை தலைவர் Alan Gelder தெரிவித்தார். இக்காலக்கட்டத்தில் ஒரு நாளுக்கான சராசரி எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது.
எல்பிஜி விற்பனை
இதே பிப்ரவரி 2023 உடன் பிப்ரவரி 2022-ஐ ஒப்பிடுகையில் எல்பிஜி விற்பனை 0.1 சதவீதம் சரிந்து 2.39 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. மேலும் சாலைகளை அமைக்க பயன்படும் bitumen விற்பனை ஜனவரி மாதத்தை விடவும் பிப்ரவரி மாதம் 21.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!



Click it and Unblock the Notifications