டெல்லி: இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை 2020ம் நிதியாண்டில், ஒரு நாளைக்கு 8% குறைந்து 4,594 பேரல்கள் குறையலாம் என்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) தெரிவித்துள்ளது.
இதே நாட்டில் பெட்ரோல் தேவையானது நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், ஒரு நாளைக்கு 350 ஆயிரம் பேரல்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க, லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணக் கட்டுப்பாடுகள் உள்ளது.
எரிபொருள் தேவை குறையும்
இதன் காரணமாக பெட்ரோல் தேவை ஏப்ரம் மற்றும் மே மாதங்களில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 60 சதவீதம் வீழ்ச்சி காணும் என்றும் இந்த நிறுவனம் கணித்துள்ளது. இதே டீசல் தேவையானது இரண்டாவது காலாண்டில் ஒரு நாளைக்கு 690 பீப்பாய்கள் குறையும் என்றும் கணித்துள்ளது. எரிபொருள் மற்றும் மண்ணெய் தேவையானது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கிட்டதட்ட 40 சதவீதம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விமான எரிபொருள் தேவை குறைகிறது
மண்ணெய் தேவையில் பாதி எரிபொருளாகப் பயன்படுகிறது. ஆனால் தற்போது விமான சேவை கடுமையான கட்டுப்பாடுகளால் மோசமாக பாதிக்கப்படும் என்றும் ஐஇஏ தெரிவித்துள்ளது. ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த எண்ணெய் தேவை 2020ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 4.60 மில்லியன் பீப்பாய்களாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி குறையும்
இது கடந்த 2019ம் நிதியாண்டில் 5.01 மில்லியன் பேரல்களாக ஒரு நாளைக்கு தேவை இருந்தது. இதே போல 2020ம் நிதியாண்டில் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியானது தொடர்ந்து குறையும் என்றும் இந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது. ஏனெனில் நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் முதிர்ந்த வயல்களில் கிணறுகளின் செயல்திறன் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றனர்.
உற்பத்தி குறைவாக இருக்கும்
மேலும் கொரோனா லாக்டவுன் காரணமாக தொழிலாளர்கள் கடலோரப் பகுதிகளுக்குள் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். ஆக இதுவும் ஒரு காரணியாக இருந்தது. ஆக வரும் மாதங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியானது குறைவாகத் தான் இருக்கும். அதே நேரம் இறக்குமதியும் 12.4 சதவீதம் குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இறக்குமதியும் சரியும்
கடந்த ஏப்ரல் மாதத்திலேயே 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு இறக்குமதி சரிந்துள்ளது. இதே எண்ணெய் பொருட்கள் இறக்குமதியும் 6.5 சதவீதம் குறைந்து 3.35 மில்லியன் டன் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் லாக்டவுன் காரணமாக சரிந்ததாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

இந்த ஏரியாவுல எந்த கப்பல் நுழைஞ்சாலும் தட்டி தூக்குவோம்!! ஈரான் மிரட்டலால் ஸ்தம்பித்த உலக நாடுகள்!!

வரலாறு திரும்புமா? 300% வரை எகிறிய ஆயில் விலை! ஈரான் புரட்சி முதல் லிபிய போர் வரை: விரிவான அலசல்!

அதிரவைக்கும் $10 ஆயில் ஸ்பைக்! மார்ஜின் அழுத்தத்தில் சிக்கப்போகும் நிறுவனங்கள்? எப்படி தப்பிப்பது?

யுத்த பூமியாகும் ஈரான்: கச்சா எண்ணெய் விலையால் இந்தியாவிற்கு ஆபத்தா?

ஈரான் போரால் இந்திய பொருளாதாரத்திற்கு கெட்ட செய்தி!! நாளைக்கு பெரிய சூறாவளியே இருக்கு!!

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

ஏசியன் பெயிண்ட்ஸ் முதல் இண்டிகோ வரை.. சரசரவென சரியும் பங்குகள்! முதலீட்டாளர்கள் தப்பிப்பது எப்படி?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications