இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தியானது மிக வேகமாக கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகின்றது.
இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. எனினும் சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பரவாயில்லை என கூறலாம்.
பணவீக்கமும் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இங்கு தேவையானது சரிவினைக் கண்டு வருகின்றது.
உற்பத்தி வளர்ச்சி
இந்தியாவில் உற்பத்தி துறையானது (PMI) எஸ் & பி குளோபல் கணிப்பின் படி, கடந்த நவம்பர் மாதத்தில் 55.7 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்தில் 55.3 ஆக இருந்தது. தொடர்ந்து 17வது மாதமாக இந்தியாவின் உற்பத்தி துறையானது தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்றது. தொடர்ந்து இந்தியாவின் உற்பத்தி துறை வளர்ச்சியானது 55 ஆக இருந்து வருகின்றது.
தேவை அதிகம்
முன்னதாக தொடர்ந்து பணவீக்கம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், தேவையானது சரிவினைக் கண்டு வந்தது. எனினும் சமீபத்திய மாதங்களாகவே தேவையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் புதிய ஆர்டர்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக உற்பத்தியும் அதிகரித்து வருகின்றன. நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ச்சியினை கண்டு வருகின்றன.
நுகர்வோர் விலையும் சரிவு
இது வேலை வாய்ப்பினை உருவாக்கி வருகின்றது. இது மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன் முயற்சிகளுக்கு வழிவகுக்கிறது என ஆய்வறிக்கை கூறுகின்றது.
இந்தியாவின் நுகர்வோர் விலையானது 7% கீழாக மூன்று மாதத்தில் முறையாக அக்டோபர் மாதத்தில் குறைந்துள்ளது . இது இனியும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்மலா சீதாராமன் எதிர்பார்ப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி வலுவாக இருக்கும் என்று கூறியுள்ளார். அடுத்த ஆண்டு வலுவான வளர்ச்சிக்கு மத்தியில் பணவீக்கமும் குறையலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியா, பல்வேறு தலைவலிகளை எதிர்கொண்டு வந்தாலும், அடுத்த ஆண்டில் வளர்ச்சி தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று மாதத்தில் இல்லாத அளவுக்கு உச்சம்
வெளிப்புற காரணிகளுக்கு மத்தியில் பணவீக்கம் என்பது குறைந்துள்ள நிலையில், கொரோனா லாக்டவுனுக்கு மத்தியில் இரண்டாவது காலாண்டுக்கு மத்தியில் 6.3% ஆக வளர்ச்சி கண்டுள்ளது.
இதற்கிடையில் நவம்பர் மாதத்தில் இந்தியாவின் வளர்ச்சி மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. சமீபத்திய மாதங்களில் புதிய ஆர்டர்கள் மற்றும் ஏற்றுமதியானது குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது.