இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டு இருந்த லாக்டவுன் மற்றும் ஊடரங்கு கட்டுப்பாடுகள் குறைந்து வரும் நிலையில் அனைத்து தொழிற்சாலைகளும் இயங்க துவங்கியுள்ளது.
இதேவேளையில் பருவமழை தாமதமான காரணத்தால் நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக வெப்பம் அதிகரித்துள்ள காரணத்தால் மக்கள் மத்தியில் பேன், ஏசி மற்றும் ஏர் கூலர் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இவ்விரண்டும் சேர்ந்து புதன்கிழமை நாட்டின் மின்சார தேவை முதல் முறையாக 200 ஜிகாவாட்-ஐ தாண்டியுள்ளது. மின்சார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் செவ்வாய்க்கிழமை 197.07 ஜிகாவாட் ஆக இருந்த மின்சார தேவை புதன்கிழமை அதிகப்படியாக 200.57 ஜிகாவாட் ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு முன் ஜூன் 30ஆம் தேதி மின்சார தேவை அதிகப்படியாக 16 சதவீதம் அதிகரித்து 191.51 ஜிகாவாட் ஆக உயர்ந்தது. இது ஜூன் 2020ல் 164.98 ஜிகாவாட் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications