கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் OPEC நாடுகள் அதிக வருமானம் பெற வேண்டும் என்பதற்காகவும், 2020ல் ஏற்பட்ட வர்த்தகச் சரிவை ஈடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் எண்ணெய் உற்பத்தியைக் குறைத்தது மட்டும் அல்லாமல் ஏப்ரல் மாதமும் இதில் எவ்விதமான தளர்வு அளிக்க முடியாது என அறிவித்துள்ளது.
எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ள காரணத்தால் இதன் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளதால் வெளிநாட்டு இறக்குமதிகளை அதிகளவில் நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகள் பாதித்துள்ளது.
இதன் வாயிலாக இந்தியா கச்சா எண்ணெய் விலை உயர்வைச் சமாளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சவுதி மற்றும் கிழக்கு இந்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவீட்டைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள்
இந்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களைக் கச்சா எண்ணெய்க்காக மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமே நம்பியிருக்கும் நிலையிலையைக் கைவிட வேண்டும் என்றும் மாற்று வழிகளைக் கண்டறியவும் அறிவுறுத்தியுள்ளது.
அமைச்சர் தர்மேந்திர பிரதான்
இதேநேரத்தில் எண்ணெய் வள துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் அளவு நாட்டுக்கு மிகப்பெரிய சக்தி எனப் பல முறை கூறியுள்ளார். இதைத் தற்போது சரியான முறையில் பயன்படுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
OPEC அமைப்பு
இந்தியா, OPEC அமைப்பிடம் உற்பத்தியை அதிகரிக்கக் கோரிக்கையும் விடுத்தும் ஏற்காத நிலையில் இந்தியா மாற்று வழியைத் தேட துவங்கியுள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதம் முழுமையாகத் தற்போது இருகக்கும் அளவீட்டையும், சவுதி மே மாதம் முதல் 25 சதவீதம் கூடுதலாகவும் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
கொள்முதல் பவர்
இன்நிலையில் இந்தியா தனது கொள்முதல் பவர்-ஐ பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளின் வர்த்தகத்தை இழப்பது என்பது சவுதி அரேபியா மற்றும் பிற அரபு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இறக்குமதி குறைப்பு
அந்த வகையில் இந்தியா தற்போது மாதம் 14.7 முதல் 14.8 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய்-ஐ OPEC நாடுகளிடம் இருந்து வாங்கும் நிலையில் இந்த அளவீட்டை 10.8 மில்லியன் பேரல் ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த வர்த்தகக் குறைப்பு அரபு நாடுகளுக்குப் பெரும் இழப்பாக இருக்கும்.
இந்தியாவின் பவர் பளே
இதேவேளையில் இனி வரும் காலத்தில் அரபு நாடுகளில் இருந்தும் வாங்கும் கச்சா எண்ணெய் அளவை குறைத்துவிட்டு அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் திட்டமிட்டு உள்ளது இந்தியா.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications