உலகளாவிய பொருளாதாரங்கள் தற்போது போருக்கு பின்பு, கொரோனா வைரஸ் என்னும் வடிவில் வந்து, மீண்டும் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தினை குறைக்கும் விதமாக எதிர்பாராதவாறு, நாடு தழுவிய லாக்டவுன் சில மாதங்களாக செய்யட்டது. இதனால் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கையும் நின்று போனாது என்றே கூறலாம்.
மீண்டு வருவதற்கான அறிகுறி
எனினும் தற்போது லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது மீண்டும் பொருளாதாரம் மீண்டு வர வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது. கடந்த மே மாதத்தில் தான் இந்த தளர்வுகள் அளிக்க தொடங்கியது அரசு. இதன் காரணமாக பொருளாதாரம் மீண்டு வருவதற்காக அறிகுறிகளைக் காண முடிகிறது.
நம்பிக்கையை தூண்டியுள்ளது
ஆனால் இது குழப்பமான கட்டத்திற்குள் நுழையும்போது இந்த அறிகுறிகள் மீண்டும் தற்போது குறைந்து வருகின்றன. எனினும் அரசாங்கம் படிப்படியாக லாக்டவுனை தளர்த்துவது சில காலாண்டுகளில் வளர்ச்சி காணும் என்ற நம்பிக்கையை தூண்டியுள்ளது. ஆனால் திறக்கப்பட்ட நிவாரணம் மங்கிய பின்னர், பொருளாதாரம் என்னவாகும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மந்த நிலையில் பொருளாதாரம்
ஏனெனில் தொழில் துறை சார்ந்த பர்சேசிங் மேனேஜர்ஸ் குறியீடு, எரிபொருள் விற்பனை குறியீடுகள் போன்ற மதிப்பிடுகள் ஜூலை மாதத்தில் சரிவினையே கண்டுள்ளன. இது வர்த்தக நடவடிக்கை மந்த நிலையில் உள்ளதையே சுட்டிக் காட்டுகின்றது.
இந்தியாவின் வளர்ச்சி
அண்மையில் நாம் கண்டிருக்க கூடிய பொருளாதார தரவுகளில் எந்தவொருமுன்னேற்றமும், தீவிர வீழ்ச்சியினை தொடர்ந்து, இயல்பாக்கலின் ஒரு பிரதிபலிப்பாகும். எனினும் இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் இதுபோன்ற வளர்ச்சியினை கண்டிருக்க வாய்ப்பில்லை என்று கோல்ட்மேன் சாச்சஸின் இந்தியாவின் தலைமை பொருளாதார வல்லுனர் பிராச்சி மிஸ்ரா கூறியுள்ளார்.
ஜிடிபியை ஊக்குவிக்க எந்தவொரு சக்தியும் இல்லை
பெரிய அளவிலான ஆதரவு திட்டங்களை, செயல்படுத்த இந்தியாவின் நிர்வாக மற்றும் நிதி திறன் குறித்து கடன் மதிப்பீட்டு முகவர் நிறுவனங்கள் கவலைப்படுவதாக மிஸ்ரா கூறியுள்ளார். கொள்கை ஆதரவு மற்றும் அதிகரித்து வரும் தேவை காரணமாக 2021ம் ஆண்டில் இந்தியா ஒரு ஊக்கத்தினை பெற முடியும் என்றாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்க, எந்தவொரு அடிப்படை சக்தியும் இல்லை என்பது மிஸ்ராவின் கருத்து.
ஜிடிபி குறையும்
2021ம் நிதியாண்டில் ரியல் ஜிடிபி 4.4% ஆக குறையலாம் என்று எதிர்பார்ப்பதாக மிஸ்ரா கூறியுள்ளார். இது 1980க்கு பிறகு மிக மோசமான ரெசசன் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தியில் உலக பொருளாதார நடவடிக்கைகளில், கொரோனா தடுப்பூசி என்ற பச்சை தளிர்களால் ஈடு செய்யப்பட்டுள்ளன. உலகளாவிய மொத்த உள் நாட்டு உற்பத்தி படிப்படியாக உயர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. எனினும் இந்தியா பொருளாதாரம் அந்த பாதையில் செல்லுமா? என்பது சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications