காற்றில் கரைந்த கனவு.. ஆடம்பரம் இருக்கு.. அத்தியாவசியம் இல்லையே.. பூட்டியே கிடக்கும் புதிய Airports!

இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளையும் நாட்டின் பெரிய நகரங்களையும் இணைக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட UDAN திட்டம், இன்று பல பிராந்தியங்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்ற உண்மையை கள நிலவரங்கள் காட்டுகின்றன. மத்திய அரசின் இந்த உயரிய நோக்கம் கொண்ட திட்டத்தின் கீழ், புதிய கட்டமைப்புகள் கட்டப்பட்டிருந்தாலும், அவை மக்களின் பயன்பாட்டிற்கு வராமல், வெற்று முனையங்களாகவே காட்சியளிக்கின்றன.

உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கர் நகரின் புறநகரில் 2024-ஆம் ஆண்டில் பெரிய அளவில் திறக்கப்பட்ட புதிய விமான நிலையம், திறப்பு விழா முடிந்து மாதங்கள் பல கடந்தும் இன்னமும் இயங்க தொடங்கவில்லை. செக்-இன் கவுண்டர்கள் ஒருபோதும் பயணிகளை பார்த்ததில்லை. பாதுகாப்புப் பணியாளர்கள் மட்டுமே அங்கு இருக்கிறார்கள். இந்த விமான நிலையம், மக்களுக்கு வாய்ப்புக்கான நுழைவாயிலாக மாறுவதற்கு பதிலாக, நிறைவேறாத ஒரு பெரிய வாக்குறுதியின் அடையாளமாகவே உள்ளது.

காற்றில் கரைந்த கனவு.. ஆடம்பரம் இருக்கு.. அத்தியாவசியம் இல்லையே.. பூட்டியே கிடக்கும் புதிய Airports!

இந்த விமான நிலையங்களின் தோல்விக்கான முக்கியக்காரணம் குறித்து விமானப் போக்குவரத்து நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த விமான நிலையங்களை இயக்குவதற்கு முன்பு, அந்தப் பகுதியில் வாழும் சாதாரண மக்கள் உண்மையிலேயே விமானத்தில் பயணிக்க விரும்புகிறார்களா அல்லது டிக்கெட் விலையை கொடுத்துப் பயணிக்க நிதி வசதி இருக்கிறதா என்று சரியான ஆய்வு நடத்தப்பட்டதா? என்று இந்திய விமான சரக்கு முகவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சி.கே. கோவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

UDAN திட்டத்தில் டிக்கெட்களுக்கு சலுகை வழங்கப்பட்டாலும், அந்த விலை கூட பல உள்ளூர் மக்களுக்கு அதிகமாக இருப்பதால், விமான நிலையங்கள் இருந்தும் பயணிகள் வராத நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் வராதது ஒருபுறம் இருக்க, அடிப்படை வசதிகள் இல்லாததும் இங்கு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. விமான நிறுவனங்கள் இந்த வழித்தடங்களில் விமானங்களை இயக்க தயக்கம் காட்டுகின்றனர்.

ஏனென்றால், பல விமான நிலையங்களில் சிறிய ஓடுபாதைகள், போதுமான பயணிகள் முனையங்கள் இல்லை. மேலும், இரவு நேரத்தில் விமானங்களை சரியாக இறக்க தேவையான நைட் நேவிகேஷன் சிஸ்டம் போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இல்லை என்று இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தக் குறைபாடுகள் மற்றும் மிக குறைவான பயணிகள் வருகை காரணமாக, விமான நிறுவனங்களுக்கு இந்த வழித்தடங்களில் விமானங்களை இயக்குவது லாபகரமான வணிகமாக இல்லை. இதனால், அரசாங்கம் ஆரம்பத்தில் அளிக்கும் சலுகைகள் முடிந்த பிறகு, பெரும்பாலான வழித்தடங்களில் சேவை நிறுத்தப்பட்டுவிடுகிறது.

ஆய்வுகளின்படி, UDAN-இன் கீழ் தொடங்கப்பட்ட வழித்தடங்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஒருபோதும் இயக்கப்படவில்லை என்றும், மிகக் குறைவான சதவீத வழித்தடங்கள் மட்டுமே 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்ததாகவும் தெரியவருகிறது. இந்த விமான நிலையங்களுக்கு இன்னொரு பெரிய போட்டியாக அமைவது இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்துக் கட்டமைப்புகள்தான்.

பல பயணிகளுக்கு, குறுகிய தூரப் பயணங்களுக்கு விமான நிலையத்திற்கு செல்வது, நீண்ட சோதனை நடைமுறைகளை முடிப்பது ஆகியவற்றை விட, புதிய விரைவுச் சாலைகளில் காரில் பயணம் செய்வது அல்லது விரைவு ரயிலில் செல்வது மலிவானதாகவும், விரைவானதாகவும் தோன்றுகிறது. விமான நிலையங்களை கட்டும் வேகம் தொடர்ந்தாலும், அவற்றை பயன்படுத்தும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்தால் மட்டுமே UDAN திட்டம் முழுமையாக வெற்றி பெறும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+