ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு என்பது மிகவும் வலிமையான ஒன்று. இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி வருவது அதற்கு சாதகமான ஒன்று அதனை தொடரும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைனுக்கு இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், மேற்கத்திய நாடுகள் சில, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்த்தன. ஆனால் இந்தியாவோ வழக்கமாக வாங்கும் எண்ணெயை விட அதிகளவில் வாங்கியது.
சொல்லப்போனால் கூடுதலாக தள்ளுபடி விலையில் வாங்கியது தான் ட்விஸ்டே.
விரிவாக்கம் செய்ய பாடுபட்டு
இந்தியாவுக்கு பின்னர் தற்போது பல நாடுகளும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
ரஷ்யாவில் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்த மத்திய அமைச்சர், இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து வணிகத்தினை விரிவாக்கம் செய்ய பாடுபட்டு வருகின்றன என கூறியுள்ளார்.
எண்ணெய் தொடர்ந்து வாங்கி வரும் இந்தியா
ஆரம்பத்தில் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி வந்த நிலையில், அது குறித்து பல மேற்கத்திய நாடுகளும் தங்களது அதிருப்தியினை காட்டின. எனினும் மக்களை பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை. அவர்களுக்கு தேவையானதை செய்ய வேண்டியது எங்களின் கடமை என்று கூறிய இந்தியா, தொடர்ந்து எண்ணெய் வாங்கி வருகின்றது.
வணிக விரிவாக்க திட்டம்
எண்ணெய் வணிகம் மட்டும் அல்ல, பல்வேறு வகையிலும் வணிகத்தினை விரிவாக்கம் செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. இரு தரப்புகளும் முன்பை விட பல்வேறு வணிகத்தினை செய்ய திட்டமிட்டு வருகின்றன. இதன் காரணமாக எதிர்காலத்தில் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும். இது நீண்டகால நோக்கில் வளர்ச்சியினை மேம்படுத்தும். இதுவே இரு அரசுகளின் நோக்கமாகவும் உள்ளது என கூறியுள்ளார்.
பொருளாதாரத்தில் தாக்கம்
ஆரம்பத்தில் கொரோனா பெருந்தொற்று, பொருளாதார மந்தம், நிதி பிரச்சனை என பல காரணிகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது. எனினும் இது மீட்சியைடைய தொடங்கிய நிலையில், தற்போது ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையில் தாக்கம் உள்ளது. இதுவும் சர்வதேச வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சீர்குலைக்கும் தாக்கம்
பயங்கரவாதம் மற்றும் காலநிலை போன்றவற்றால் பிரச்சனைகள் உள்ளன. இவை இரண்டும் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் சீர்குலைக்கும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
எங்கள் பேச்சுகள் ஒட்டுமொத்த உலகளாவிய நிலைமை மற்றும் கவலைகளை நிவர்த்தி செய்யும் என்றும் கூறினார்.
எங்களின் நோக்கம்
இருதரப்பு உறவுகளைப் பொறுத்தமட்டில், சமகால, சம நிலையான, பரஸ்பர நன்மை பயக்கும் திட்டங்களில், நீண்டகால ஈடுபாட்டை உருவாக்குவதே எங்களின் நோக்கம்.
குறிப்பாக நமது பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிக்கும்போது, இது ஒரு குறிப்பிடத்தக்க கட்டாயமாகும். எங்களுடைய பகிரப்பட்ட இலக்குகள் எப்படி அடையப்படுகின்றன என்பது பற்றி விவாதிப்போம் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.
நீண்டகால உறவு
நீண்டகாலமாகவே இந்தியா ரஷ்யா உறவானது வலுவாக இருந்து வருகின்றது. இது பாரம்பரிய நட்பாக இருந்து வருகின்றது. அது உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் இன்னும் வலுவடைந்துள்ளது. வணிக ரீதியாகவும் மேம்பட்டுள்ளது. சீனாவுடனான முக்கியத்துவத்தினை குறைக்க முடியாமல் இருந்து வரும் இந்தியாவுக்கு, ஆரம்ப காலத்தில் இருந்தே ரஷ்யாவின் நட்பானது மிக அவசியமான ஒன்றாக இருந்து வருகின்றது.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications