இந்திய முதலீட்டு சந்தையையும், வர்த்தக சந்தையையும் சீனா நிறுவனங்களுக்கு 2020 கல்வான் பிரச்சனைகளுக்கு பின்பு முழுமையாக மூடப்பட்டது. இதனால் சீனாவில் இருந்து வரும் அன்னிய நேரடி முதலீடுகள் முழுமையாக தடைபெற்றது.
இது மட்டும் அல்லாமல் இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு அன்னிய முதலீட்டையும் சீனாவுடன் தொடர்பு உடையதா என்பதை ஆய்வு செய்து அதன் பின்பே ஒப்புதல் அளித்து வந்தது.

ஆனால் இந்த தடைக்கு முன்பு எலக்ட்ரானிகஸ் முதல் பார்மா வரையில் அனைத்து துறையிலும் முதலீடு செய்து வந்தது மட்டும் அல்லாமல் நாட்டின் முக்கிய FDI பங்கீட்டாளராகவும் இருந்தது. இத்தடைக்கு பின்பு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பலகட்ட ஆலோசனை, கோரிக்கைகள் அடிப்படையில் இந்திய அரசு சீனா முதலீடுகளுக்கு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டது. அதாவது இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களில் 10 சதவீதம் வரையில் மட்டும் சீனா முதலீடுகள் இருந்தால் ஆட்டோமேட்டிக் முறையில் இந்தியாவில் முதலீடு செய்யலாம் என்ற தளர்வை அளித்தது.
முன்பு சீன முதலீடு இருக்கும் எந்த நிறுவனமாக இருந்தாலும் அரசின் ஒப்புதல் பெற்ற பின்னரே முதலீடு செய்ய முடியும். ஆட்டோமேட்டிங் முறை என்பது ஒப்புதல் இல்லாமல் முதலீடு செய்யக்கூடிய வசதியை அளிப்பது.
இந்த தளர்வு உண்மையிலேயே பலன் கொடுத்துள்ளது, சுமார் 4896.65 கோடி ரூபாய் மதிப்பிலான 29 FDI திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய மாற்றம் மே 1, 2026ல் FEMA விதிகள் தளத்தியது மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. வெறும் 4 மாதத்தில் 5000 கோடி ரூபாய் முதலீடு வந்தது மூலம் இந்திய நிறுவனங்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளது.
இந்த 5000 கோடி ரூபாய் முதலீடு ஐடி சேவை துறை, ஏஐ, தகவல் மற்றும் தொடர்பு, உற்பத்தி, பார்மா, டேட்டா சென்டர், போக்குவரத்து துறை என பல துறையில் இருந்து வந்துள்ளது. மேலும் இந்த முதலீடுகள் மொரிசியஸ். அமெரிக்கா, கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், லக்சம்பெர்க், கேமேன் தீவுகளில் இருந்து வந்துள்ளது.
இதேபோல் மத்திய அரசு கொடுத்துள்ள தளர்வு இந்தியா தனது எல்லையை பகிர்ந்துள்ள நாடுகளான சீனா, ஹாங்காங், இலங்கை போன்ற நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கு பொருந்தாது.
இப்பிரிவு நாடுகளுக்கு ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும் என்பதில் இந்தியா திட்டவட்டமாக உள்ளது. இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்துள்ள நாடுகள் பட்டியலில் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், பூட்டான், மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் அடக்கம்.
2020 கல்வான் எல்லை பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் மத்தியிலான தாக்குதல் சம்பவத்திற்கு பின்பு இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களில் ஒரு பங்கை இந்த எல்லை நாட்டு நிறுவனங்கள் வைத்திருந்தாலும் இந்திய அரசிடம் அனுமதி பெற்ற பின்பு ஒப்புதல் கிடைக்கும். ஆனால் தற்போது 10 சதவீதம் வரையில் தளர்வு கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications