உலகிலேயே மிகவும் நீளமான பேருந்து பயணம் இருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. பல ஆண்டுகளுக்கு முன்பு உண்மையில் இதுதான் நிலைமை லண்டனில் இருந்து கொல்கத்தா வரையில் சுமார் 110 நாட்களில் உலகின் மிக நீளமான பயணத்தை மேற்கொண்ட ஒரு பேருந்தின் கதையைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம். முன்பு மாட்டு வண்டி, நடைப்பயணம் என்று தங்கள் பயணத்தை மேற்கொண்டிருந்த மக்கள் படிப்படியாக பேருந்து பயணத்திற்கு தயாராகி வந்த காலம் அது.
லண்டனில் உள்ள விக்டோரியா கோச் ஸ்டேஷனில் இருந்த மக்கள், லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு செல்வதற்கு வரிசையில் நிற்பதை காட்டும் புகைப்படம் சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இந்த புகைப்படம் ஏப்ரல் 15-ஆம் தேதி 1957-ஆம் ஆண்டுக்கு முந்தையதாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வெளியான புகைப்படத்தில் இருக்கும் பேருந்தில் லண்டன்-கொல்கத்தா-லண்டன் என்ற பாதையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1950-ஆம் ஆண்டுகளில் கொல்கத்தாவில் இருந்து லண்டனுக்கும். லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கும் செல்வதற்கு இந்த ஒரு பேருந்து தான் பயன்பட்டது. ஆல்பர்ட் என்ற பெயர் கொண்ட இந்தப் பேருந்து சுமார் 21 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வந்தது.
ஆல்பர்ட் பேருந்து இந்தியா முழுவதும் பயணம் செய்வதற்கு 5 நாட்கள் ஆனது. அப்போது ஒரு டிக்கெட் விலை 85 பவுண்டுகளாக இருந்தது. மேலும் போகும் ஊரிலிருந்து மீண்டும் திரும்புவதற்கு 65 பவுண்டுகளுக்கு டிக்கெட் விற்பனையானது. அதே கட்டணம் இன்றைய ரூபாய் மதிப்பில் ரூ.7,963 ஆகவும், திரும்பும் பயணத்திற்கு ரூ.6,089 ஆகவும் இருந்திருக்கும்.
லண்டன், பெல்ஜியம், வெஸ்ட் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, யூகோஸ்லேவியா, பல்கேரியா டர்க்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் பாகிஸ்தான் இறுதியாக இந்தியா வரை செல்லும் வழித்தடத்தை காட்டும் வகையிலான புகைப்படமும் ஆன்லைனில் பரவியது. இதற்கான டிக்கெட் கட்டணம் பயணம், உணவு மற்றும் தங்கும் இடம் உட்பட 145 பவுண்டுகள் செலவாகியுள்ளது. அதாவது இந்திய மதிப்புக்கு 13,590 ரூபாய். இந்தியாவில் டெல்லி, அலகாபாத், பனாரஸ் போன்ற நகரங்களைக் கடந்து இறுதி இலக்கான கொல்கத்தாவை ஆல்பர்ட் பேருந்து அடைந்தது.
ஆல்பர்ட் பேருந்தில் பயணம் செய்யும்போது மிகவும் வசதியாக பயணிக்க, கீழ்த் தளத்தில் புத்தகங்கள் வாசிப்பதற்கும், உணவருந்துவதற்கும் அறை இருந்தது. மேல் தளத்தில் பயணிகள் வேடிக்கை பார்த்து கொண்டே பயணம் செய்யலாம். அதோடு அனைத்து வசதிகளுடன் கூடிய சமையல் அறையும் இருந்தது. மேலும் பார்ட்டிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
மேலும் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ஷாஜகானின் மைல் சிம்மாசனம், டெல்லியில் உள்ள ராஜ்பாத் ஆகிய இடங்களையும் ரசித்துக்கொண்டே பயணம் செய்யும் வகையில் இருந்தது
இருப்பினும் நல்ல விஷயங்கள் அனைத்திற்கும் ஒரு முடிவு இருப்பது போல ஆல்பர்ட் பேருந்திற்க்கும் ஒரு முடிவு வந்தது. சென்ட்ரல் வெஸ்டர்ன் டெய்லி அறிக்கையினபடி பேருந்தின் பின்புறத்தில் சேதம் ஏற்பட்டதால் ஆல்பர்ட் பேருந்து சேவையிலிருந்து நீக்கப்பட்டது. 1968-ஆம் ஆண்டு மே மாதம் பிரிட்டிஷ் பயணியான ஆண்டி ஸ்டீவர்ட்டால் ஆல்பர்ட் பேருந்து வாங்கப்பட்டது.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

விரிசலடைந்த இந்தியா - கனடா உறவை மீட்கும் முயற்சி: கனடா பிரதமர் கார்னி இந்தியா வருகை!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

பட்ஜெட் மாசத்துல மத்திய அரசுக்கு பணமழை: 8% உயர்ந்த ஜிஎஸ்டி வருவாய்!!

H1B விசா: $100000 கட்டணம் செலுத்த தயங்கும் அமெரிக்க நிறுவனங்கள்!! இந்திய டெக்கிகளே கவனம்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!



Click it and Unblock the Notifications